27

1 - திருமுருகாற்றுப்படை

கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
யைவரு ளொருவ னங்கை யேற்ப
255வறுவர் பயந்த வாறமர் செல்வ
வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
விழையணி சிறப்பிற் பழையோள் குழவி
260 வானோர் வணங்குவிற் றானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள

253-5. "கடவு ளொருமீன் சாலினி யொழிய, வறுவர் மற்றை யோரும் ........... நிவந்தோங் கிமயத்து நீலப் பைஞ்சுனைப், பயந்தோரென்ப பதுமத்துப் பாயல்" (பரி.5 : 44-9); "சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர், திருமுலைப்பா லுண்டான்" (சிலப். 24 : "உரையினி")

256. ஆல்கெழு கடவுட் புதல்வ: " ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுப்ப" (சிறுபாண். 97); "ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல்" "ஆலமர் செல்வ னணிசான் மகன்"; (கலித். 81 : 7, 83 : 14); "ஆலமர் கடவு ளன்னநின் செல்வம்"; (புறநா. 198 : 9); "ஆலமர் செல்வன் புதல்வன்" (சிலப். குன்றக். ); "ஆலமர் செல்வன் மகன்" (மணி. 3 : 144)

257. மலைமகண் மகனே: "மலைமகண் மகனே" (சிலப்.குன்றக்.); "மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே யென்றற் றொடக்கத்தன காரணக் குறியாக்கந் தொடர்ந்தன" (நன். வி. சூ. 275)

258. கொற்றவை சிறுவ : "சேய்பயந்த மாமோட்டுத் துணங்கையஞ் செல்விக்கு" (பெரும்பாண். 458-9)

259. பழையோள்: "தொல்லைநாயகி" (தக்க. 120)

261. நூலறி புலவ: "நூலறி புலவரை நோக்க" (சிலப். 25 : 116) புலவ: "பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே" "புலமையோய்" (முருகு. 268,280); "சங்கத் தமிழின் றலைமைப் புலவா" (முத்துக்குமார. தாலப்.)

262. பொருவிறல் மள்ள: "பொருமறையார் கழல்வீரர் வீரன்" (சிவஞானசித். முருகக்.)