1 - திருமுருகாற்றுப்படை | கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை யைவரு ளொருவ னங்கை யேற்ப | 255 | வறுவர் பயந்த வாறமர் செல்வ வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ விழையணி சிறப்பிற் பழையோள் குழவி | 260 | வானோர் வணங்குவிற் றானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவி லொருவ பொருவிறன் மள்ள |
253-5. "கடவு ளொருமீன் சாலினி யொழிய, வறுவர் மற்றை யோரும் ........... நிவந்தோங் கிமயத்து நீலப் பைஞ்சுனைப், பயந்தோரென்ப பதுமத்துப் பாயல்" (பரி.5 : 44-9); "சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர், திருமுலைப்பா லுண்டான்" (சிலப். 24 : "உரையினி") 256. ஆல்கெழு கடவுட் புதல்வ: " ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுப்ப" (சிறுபாண். 97); "ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல்" "ஆலமர் செல்வ னணிசான் மகன்"; (கலித். 81 : 7, 83 : 14); "ஆலமர் கடவு ளன்னநின் செல்வம்"; (புறநா. 198 : 9); "ஆலமர் செல்வன் புதல்வன்" (சிலப். குன்றக். ); "ஆலமர் செல்வன் மகன்" (மணி. 3 : 144) 257. மலைமகண் மகனே: "மலைமகண் மகனே" (சிலப்.குன்றக்.); "மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே யென்றற் றொடக்கத்தன காரணக் குறியாக்கந் தொடர்ந்தன" (நன். வி. சூ. 275) 258. கொற்றவை சிறுவ : "சேய்பயந்த மாமோட்டுத் துணங்கையஞ் செல்விக்கு" (பெரும்பாண். 458-9) 259. பழையோள்: "தொல்லைநாயகி" (தக்க. 120) 261. நூலறி புலவ: "நூலறி புலவரை நோக்க" (சிலப். 25 : 116) புலவ: "பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே" "புலமையோய்" (முருகு. 268,280); "சங்கத் தமிழின் றலைமைப் புலவா" (முத்துக்குமார. தாலப்.) 262. பொருவிறல் மள்ள: "பொருமறையார் கழல்வீரர் வீரன்" (சிவஞானசித். முருகக்.)
|