270
85பாவை விளக்கிற் பரூஉச்சுட ரழல
விடஞ்சிறந் துயரிய வெழுநிலை மாடத்து
முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி 
யின்ப லிமிழிசை யோர்ப்பனள் கிடந்தோ
ளஞ்செவி நிறைய வாலின வென்றுபிறர்
90வேண்டுபுலங் கவர்ந்த வீண்டுபெருந் தானையொடு
விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு
வயிறும் வளையு மார்ப்ப வயிர
செறியிலைக் காயா வஞ்சன மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக்
95கோடற் குவிமுகை யங்கை யவிழத்

85. "யவன ரியற்றிய வினைமாண் பாவை, கையேந் தையகனிறையநெய் சொரிந்து, பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி", "பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல" (நெடுநல். 101-3, 175) ;" பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல" (பதிற்,47: 6)
பரூஉச்சுடர் : "பள்ளி மாடத்துப் பரூஉச்சுடர்கொளீஇ" (பெருங். 1. 54: 8)

86. எழுநிலைமாடம் : "எழுநிலை மாடஞ் சேர்ந்தும்" (சீவக. 2840)

86-7. "நீர்பாய் மாடமொடு","ஏரணி யமைந்த வெழுநிலை நல்வினை, நீரணி மாடத்து"(பெருங். 1. 38 : 77, 40 : 16-7)

87-8. "கார்வா னின்னுறை தமியள்கேளா" (புறநா. 157: 3)

89. அல்வழிக்கட் ககரமும் அகரமுங்கெடுதற்கு இது மேற்கோள் : தொல். குற். சூ. 78, ந.

90-91. "நீரொலித் தன்ன நிலவுவேற்றானையொடு, புலவுப் படக் கொன்று மிடைதோ லோட்டிப்,புகழ்செய் தெடுத்த விறல்சா னன்கொடி" (மதுரைக் 369-71).

92. வயிரும் வளையும் ஆர்த்தல் : முருகு. 120-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

93. செறியிலைக்காயா : "செறியிலைக் காயா சிறுபுறத் துறைப்ப" (பெருங். 1. 49: 115)

"கண்ணிய லஞ்சனஞ் தோய்ந்தபோற் காயாவும், நுண்ணரும் பூழ்த்த புறவு" (கார்.8) "அஞ்சனங் காயா மலர" (திணைமொழி. 21)

94. "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்" (அகநா. கடவுள். ) ; "கொன்றைகள்பொன்சொரிய" (தேவாரம், திருப்புகலி.)

95. "செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவும்" (சிறுபாண்.