102. துனை புரி துரக்கும் செலவினர்-விரைந்துசெல்லும் பரியை அதனான் அமையாமற் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையராய் வந்த வருடைய, என்றது : "வினை வயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை, யிடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை, யுள்ளம் போல வுற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா வுடைமை யான " (தொல். கற்பியல், சூ. 53)என்பது தோன்றக் கூறிற்று. 103. வினை விளங்கு நெடு தேர் பூண்ட மாவே-தான் எடுத்துக் கொண்ட வினை எக்காலமும் விளங்கும் நெடிதாகிய தேரைப்பூண்ட குதிரை. தலைவி தன்னிடத்தே வதிக்கின்றவனை இன்றுயிலைக்காணாளாய் (80) நெஞ்சாற்றுப்படுத்த புலம்பாலே (81) ஓடுவளை திருத்தியும் (82) மையல் கொண்டும் உயிர்த்தும் (83) நடுங்கி நெகிழ்ந்து (84) பூப்போலுண்கண் புலம்புமுத்துறைப்ப (23) அதுகண்டு துயருழந்து (80) தேற்றியும் (82) வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமெனக் கருதிக் காட்டவும் காட்டவும் காண தவள் (22) பெருமுது பெண்டிர் (11) எவ்வம் களையெனக்கூற (21) அதுகேட்டு நீடுநினைந்து (82) பெரும்பெயல்பொழிந்த சிறுபுன் மாலையில் (6) இட்டசுடர் அழலாநிற்க (85) இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோளுடைய (88) அஞ்செவிநிறையப் (89) பரந்தபாடியிலே (28) அரசிருந்து (79) ஒருவகை பள்ளியொற்றி ஒருகை (75) முடியொடுசேர்த்தி (76) வேழத்தை (69) உள்ளியும் (72) மாவைச்சிந்தித்தும் (74) ஒழிந்தோரை உள்ளியும் (72) நினைந்து (76) நடுங்குதற்குக் காரணமான பாசறையிற் (79) பெரும்படைநாப்பண் வேறோர் (43) அகம் நேர்பு கண்டங்கோலி (44) யவனர் (61) புலித்தொடர்விட்ட நல்லில்லிலே (62) பொழுதளந்தறியும் (55) காண்கையர் (56) கன்னல் இனைத்தென்றிசைக் கையினாலே (58) மங்கையர் (47) திருமணிவிளக்கங்காட்டி (63) எழினி வாங்கிய பள்ளியிலே சென்று (64) இளையர் கவளங் கைப்பச் (36) சுரையர் (48) மாட்டப் (49) பெருமூதாளர் ஏமஞ்சூழ (54) மிலேச்சர் உழையராக (68) வெண்மணிநிழத்திய நடுநாளினும் (50) மண்டமர்நசையாற் கண்படைபெறாதிருந்து (67) மற்றைநாட் படைகொணோன் விரலாலே (77) வென்று (89) கண்ணிவலந்திருத்திப் (78) பிறர்வேண்டுபுலங்கவர்ந்த (90) விசயத்தாலே வெல்கொடியுயரிக் (91) காடு பிறக்கொழியப் (101) பெருவழியிலே (97) வயிரும் வளையுமார்ப்ப (92) ஈண்டு பெருந்தானையோடே (90) துனைபரிதுரக்குஞ் செலவினையுடையராய் வந்தவருடைய (102) தேர்பூண்டமா (103) ஆலின (89) வென வினை முடிக்க. "செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்" (தொல். கற்பியல். சூ. 44) என்பதனால் வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்றுணர்க.
|