288
ஆறாவது

1மதுரைக் காஞ்சி

ஓங்குதிரை வியன்பரப்பி
னொலிமுந்நீர் வரம்பாகத்
தேன்றூங்கு முயர்சிமைய
மலைநாறிய வியன்ஞாலத்து
5வலமாதிரத்தான் வளிகொட்ப
வியனாண்மீ னெறியொழுகப்
பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறு
மிரவுச்செய்யும் வெண்டிங்களு
மைதீர்ந்து கிளர்ந்துவிளங்க

1வீடு பேறு நிமித்தமாகச் சான்றோர் பல்வேறு நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி காஞ்சித்திணைக்கு உதாரணமென்பர்; தொல். புறத். சூ. 23, ந.

1. நேர்புநிரையாகிய ஆசிரியவுரிச்சீர் வஞ்சியுள் வந்ததற்கும் (தொல். செய். சூ. 14, பேர்.), குறளடிக்கும் (தொல். செய். சூ. 40. ந.) இவ்வடி மேற்கோள்.

1-2. வழிமோனைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ. 94, பேர்.

3. (பி-ம்.) ‘தூங்கியவுயர்'

தேன் தூங்குமுயர்சிமையம் : "பிரசந் தூங்கு மலைகிழவோற்கே" (குறுந். 392:8) ; "பிரசந் தூங்கு சேட்சிமை, வரை" (அகநா. 242 : 21-2)

4. "மாமலை ஞாறிய ஞாலம்" (பரி. "வானாரெழிலி") ; "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே" (பு. வெ. 35)

3-4. இவ்வடிகள் பதினெட்டெழுத்தான் வந்தனவென்பர் ; தொல். செய். சூ. 50, இளம்.

1-4. யா. வி. செய். சூ. 2, மேற்.

5. "வளிவலங் கொட்கு மாதிரம் வளம்படும்" (மணி. 12 : 91) சிந்தடியென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். செய். சூ. 38, ந.

7-8. பெரும்பாண். 442-இன் உரையையும் குறிப்புரையையும் பார்க்க.

முரணிரனிறைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; யா. வி. சூ. 95, உரை