10 | மழைதொழி லுதவ மாதிரங் கொழுக்கத் தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய நிலனு மரனும் பயனெதிர்பு நந்த நோயிகந்து நோக்குவிளங்க மேதக மிகப்பொலிந்த | 15 | வோங்குநிலை வயக்களிறு கண்டுதண்டாக் கட்கின்பத் துண்டுதண்டா மிகுவளத்தா னுயர்பூரிம விழுத்தெருவிற் பொய்யறியா வாய்மொழியாற் | 20 | புகழ்நிறைந்த நன்மாந்தரொடு நல்லூழி யடிப்படரப் பல்வெள்ள மீக்கூற வுலக மாண்ட வுயர்ந்தோர் மருக பிணக்கோட்ட களிற்றுக்குழும்பி |
6-10. "மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப" (பதிற். 90: 1) 11. தொடுப்பு : "தொடுப்பே ருழவ ரோதைப் பாணியும்" (சிலப். 27: 230) ஆயிரம் : "வேலி யாயிரம் விளையுட் டாக" (பொருந. 246-7) 10-11. "வான மின்னுவசிவு பொழிய வானா, திட்ட வெல்லாம் பெட்டாங்கு விளைய" (மலைபடு. 97-8) 12. (பி-ம்.) ‘எதிர்புந்த' 14. (பி-ம்.) ‘மேதகப் பொலிந்த' 17. (பி-ம்.) ‘தண்டாவிகு' 16-7. ஆறெழுத்து இருசீரடி வஞ்சிப்பாவிற்கு இவ்வடிகள் மேற்கோள் ; யா. வி. சூ. 95, உரை. 18. (பி-ம்.) ‘பூரிய விழுத்தெரு' 21. "நல்லூழி யாவர்க்கும் பிழையாது வருதனின்" (கலித். 99:5-6) ; "முத லூழியின்பம், வரவிப் படிதன்னை வாழ்வித்த வாணன்" (தஞ்சை. 286) ; "வேதமு மெய்ம்மையு மாதியுகம்போலத் தலைசிறப்ப வந்தருளி" (விக்ரம. மெய்க். "பூமாலை") ; "ஆதியுகங் கொழுந்து விட்டுத் தழைத்தோங்க" (இரண்டாம் இராசஇராச. மெய்க். "பூமருவிய பொழில்") 22. "ஆயிர வெள்ளம் வாழிய பலவே" (பதிற். 21:38) 24. பிணக்கோட்ட களிறு : "வேலாண் முகத்த களிறு" (குறள், 500)
|