292
பொருதவரைச் செருவென்று
மிலங்கருவிய வரை நீந்திச்
சுரம்போழ்ந்த விகலாற்ற
லுயர்ந்தோங்கிய விழுச்சிறப்பி
60னிலந்தந்த பேருதவிப்
பொலந்தார் மார்பி னெடியோ னும்பன்
மரந்தின்னூஉ வரையுதிர்க்கு
நரையுருமி னேறனையை
யருங்குழுமிளைக் குண்டுகிடங்கி
65னுயர்ந்தோங்கிய நிரைப்புதவி
னெடுமதி னிரைஞாயி
லம்புமி ழயிலருப்பந்

55-6. "கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழிய, னாலங்கானத் தகன்றலை சிவப்பச், சேரல் செம்பியன் சினங்கெழு திதியன், போர்வல் லியானைப் பொலம்பூ ணெழினி, நாரறி நறவி னெருமை யூரன், தேங்கம ழலகத்துப் புலர்ந்த சாந்தி, னிருங்கோ வேண்மா னியறேர்ப் பொருநனென், றெழுவர் நல்வல மடங்க வொருபகல், முரைசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக், கொன்று", (அகநா. 36:13-22) ; "எழுவர் நல்வலங் கடந்தோய்", "புனைகழ லெழுவர் நல்வல மடங்க, வொருதா னாகிப் பொருதுகளத் தடலே" (புறநா. 19 : 17, 76:12-3)

58. (பி-ம்.) ‘மலைநீந்தி'

இலங்கருவிய வரை : "இலங்கு மருவித்தே யிலங்கு மருவித்தே, வானி னிலங்கு மருவித்தே தானுற்ற, சூள்பேணான் பொய்த்தான் மாலை" (கலித். 41:18-20)

61. தார்மார்பு : "வண்ண மார்பிற்றார்" (புறநா. 1:2) ; நெடியோன் : "முந்நீர் விழவி னெடியோன்" (புறநா. 9:10) ; "உரைசால் சிறப்பி னெடியோன்" (சிலப். 22:60)

60 - 61. நிலந்தந்த பேருதவி நெடியோன் : "நிலந்தரு திருவி னெடியோன் போல" (மதுரைக். 763) ; "நிலந்தரு திருவிற் பாண்டியன்" (தொல். பாயிரம்)

63. "அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச், செருமாண் பஞ்சவ ரேறே" (புறநா. 58:7-8)

67. "அம்புமிழ்வ வேலுமிழ்வ" (சீவக. 103)

64 - 7. "கடிமிளைக் குண்டுகிடங்கி, னெடுமதி னிரைஞாயி, லம்புடை யாரெயில்" (பதிற். 20:17-9)