| தண்டாது தலைச்சென்று கொண்டுநீங்கிய விழுச்சிறப்பிற் | 70 | றென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லைத் தொன்றுமொழிந்து தொழில்கேட்ப வெற்றமொடு வெறுத்தொழுகிய கொற்றவர்தங் கோனாகுவை | 75 | வானியைந்த விருமுந்நீர்ப் பேஎநிலைஇய விரும்பௌவத்துக் கொடும்புணரி விலங்குபோழக் கடுங்காலொடு கரைசேர நெடுங்கொடிமிசை யிதையெடுத் | 80 | தின்னிசைய முரசமுழுங்கப் பொன்மலிந்த விழுப்பண்ட நாடார நன்கிழிதரு மாடியற் பெருநாவாய் மழைமுற்றிய மலைபுரையத் | 85 | துறைமுற்றிய துளங்கிருக்கைத் தெண்கடற் குண்டகழிச் சீர்சான்ற வுயர்நெல்லி னூர்கொண்ட வுயர்கொற்றவ நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர் |
70 - 71. மு. புறநா. 17:1-2. 72. மு. ஒ. மதுரைக். 124 ; பதிற். 90:8. 70 - 72. "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்", "தென்குமரி வடபெருங்கற், குணகுடகட லாவெல்லை, குன்றுமலை காடுநா, டொன்றுபட்டு வழிமொழிய" (புறநா. 6:1-4, 17:1-4) 80. கப்பலில் முரசம் முழங்குதல் : "ஆடுகொடி யுச்சியணி கூம்பினுயர் பாய்மூன், றீடுபடச் செய்திளைய ரேத்தவிமிழ் முந்நீர்க், கோடு பறை யார்ப்ப ................ ஓடியதை யன்றே" (சீவக. 501) 82. (பி-ம்.) ‘நாடாரக்கரைசேர நெடுங்கொடிமிசை நன்கிழி தரும்' 89. (பி-ம்.) ‘நீர்தெவுநிரை' தெவ்வுகொள்ளுதலாகிய குறிப்புப்பொருளை யுணர்த்து மென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி, சூ. 49, சே ; 47, ந ; இ-வி. சூ. 290.
|