90 | பாடுசிலம்பு மிசையேற்றத் தோடுவழங்கு மகலாம்பியிற் கயனகைய வயனிறைக்கு மென்றொடை வன்கிழா அ ரதரி கொள்பவர் பகடுபூண் டெண்மணி | 95 | யிரும்பு ளோப்பு மிசையே யென்று மணிப்பூ முண்டகத்து மணன்மலி கானற் பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப ஒருசார், விழவுநின்ற வியலாங்கண் முழவுத்தோண் முரட்பொருநர்க் | 100 | குருகெழு பெருஞ்சிறப்பி னிருபெயர்ப் பேராயமொ டிலங்குமருப்பிற் களிறுகொடுத்தும் பொலந்தாமரைப் பூச்சூட்டியு நலஞ்சான்ற கலஞ்சிதறும் | 105 | பல்குட்டுவர் வெல்கோவே |
90. (பி-ம்.) ‘ஏத்தத்' 92. (பி-ம்.) ‘கயமகைய' 91-3. ஆம்பி, கிழாஅர் : "ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேற்றமும்" (சிலப். 10:110) 89-93. கிழார் பூட்டைப்பொறி யென்னும் பொருளில் வருமென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; சிலப். 10:110, அடியார். 94. (பி-ம்.) ‘அதரிகொள்பவரிசை' 96. சிறுபாண். 148-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 98. "விழவுநின்ற வியன்மறுகில்" (மதுரைக். 328) 99-102. பொருந. 125-7ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க ; "தெருவி னலமருந் தெண்கட் டடாரிப், பொருவில் பொருநநீ செல்லிற்-செருவில், அடுந்தடக்கை நோன்றா ளமர்வெய்யோ னீயும், நெடுந்தடக்கை யானை நிரை" (பு. வெ. 218) 99-103. பொருநருக்குப் பொற்றாமரைப் பூச்சூட்டல் : பொருந. 159-60-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க. 105. "பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத் தொக்கது, ‘பல்குட்டுவர்' என்பதுபோல" (புறநா. 195, உரை)
|