| கல்காயுங் கடுவேனிலொ டிருவானம் பெயலொளிப்பினும் வரும்வைகன் மீன்பிறழினும் வெள்ளமா றாது விளையுள் பெருக | 110 | நெல்லி னோதை யரிநர் கம்பலை புள்ளிமிழ்ந் தொலிக்கு மிசையே யென்றுஞ் சலம்புகன்று சுறவுக்கலித்த புலவுநீர் வியன்பௌவத்து நிலவுகானன் முழவுத்தாழைக் | 115 | குளிர்ப்பொ தும்பர் நளித்தூவ னிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை யிருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொ டொலியோவாக் கலியாணர் முதுவெள்ளிலை மீக்கூறும் | 120 | வியன்மேவல் விழுச்செல்வத் திருவகையா னிசைசான்ற சிறுகுடிப் பெருந்தொழுவர் குடிகெழீஇய நானிலவரொடு தொன்றுமொழிந்து தொழில்கேட்பக் | 125 | காலென்னக் கடிதுராஅய் நாடுகெட வெரிபரப்பி |
106. "மலைவெம்ப", "விறன்மலை வெம்ப", "இலங்குமலை வெம்பிய", "கல்காய்ந்த காட்டகம்" (கலித். 13:5, 20:5, 23:3, 150:11) 114. நிலவு மணலுக்கு உவமை : பொருந. 213-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 115. (பி-ம்) ‘குளிர்ப் பொதும்பு' 116. திமில் வேட்டுவர் : "வன்கைத் திமிலர்" (மதுரைக். 319) ; "பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே" (குறுந். 123 : 5) 124. மு. ஒ. மதுரைக். 72 126. "இழிபறியாப் பெருந்தண்பணை, குரூஉக்கொடிய வெரிமேய, நாடெனும்பேர் காடாக" (மதுரைக். 154-6) ; "முனையெரி பரப்பிய", "ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப், போர்சுடு கமழ் புகை மாதிர மறைப்ப" (பதிற். 15:2, 71:9-10) ; "வாடுக விறை வநின் கண்ணி யொன்னார், நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே",
|