296
யாலங்கானத் தஞ்சுவரவிறுத்
தரசுபட வமருழக்கி
முரசுகொண்டு களம்வேட்ட
130வடுதிறலுயர் புகழ்வேந்தே
நட்டவர் குடியுயர்க்குவை
செற்றவ ரரசுபெயர்க்குவை
பேருலகத்து மேஎந்தோன்றிச்

"பகைவ, ரூர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக், கொள்ளை மேவலை" "பெருந்தண்பணை பாழாக, வேம நன்னா டொள்ளெரி யூட்டினை" (புறநா. 6:21-2, 7:7-9, 16-7) ; அயிலென்ன கண்புதைத் தஞ்சியலறி, மயிலன்னார் மன்றம் படரக்-குயிலகவ, வாடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார்நாட், டோடெரியுள் வைகின வூர்" (பு. வெ. 49)

129. முரசுகொள்ளல் : "முரசுகொண், டாண்கட னிறுத்தநின் பூண்கிளர் வியன்மார்பு" (பதிற். 31:13-4) ; "முரைசொடு வெண்குடை யகப்படுத் துரைசெலக், கொன்றுகளம் வேட்ட ஞான்றை" (அகநா. 36:21 - 2) ; "பிணியுறு முரசங் கொண்ட காலை", "அருஞ் சமஞ்சிதையத் தாக்கி முரசமொ, டொருங்ககப் படேஎ னாயின்" "விசிபிணி முரசமொடு மண்பல தந்த, திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன்" (புறநா. 25:7, 72:8 - 9, 179:4 - 5)

களம் வேட்டல் : முருகு. 99 -100-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

127- 9. மதுரைக். 55 - 6-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

128 - 30. "அரைசுபட வமருழக்கி, உரைசெல முரசுவௌவி, முடித்தலை யடுப்பாகப், புனற்குருதி யுலைக்கொளீஇத், தொடித்தோட்டுடுப்பிற் றுழந்தவல்சியின், அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய" (புறநா. 26:6-11)

131 - 2. "மலைந்தோர் தேஎ மன்றம் பாழ்பட, நயந்தோர் தேஎ நன்பொன் பூப்ப" (பெரும்பாண். 423-4) ; "இகழுநர்ப் பிணிக்கு மாற்றலும் புகழுநர்க், கரசுமுழுது கொடுப்பினு மமரா நோக்கமொடு ............. வீயாது சுரக்குமவ னாண்மகி ழிருக்கையும்" (மலைபடு. 73-6) ; "செற்றோரை வழிதபுத்தன, னட்டோரை யுயர்புகூறினன்" (புறநா. 239 : 4 -5); "நட்டாரை யாக்கிப் பகைதணிந்து" (பழமொழி, 398; சிறுபஞ்ச, 18) ; பெரும்பாண். 419-குறிப்புரையையும், 424 - குறிப்புரையையும் பார்க்க.