297
சீருடைய விழுச்சிறப்பின்
135விளைந்துமுதிர்ந்த விழுமுத்தி
னிலங்குவளை யிருஞ்சேரிக்
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப்பொருந
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்
140றஞ்சுவரத் தட்கு மணங்குடைத் துப்பிற்
கோழூஉன்குறைக் கொழுவல்சிப்
புலவுவிற் பொலிகூவை
யொன்றுமொழி யொலியிருப்பிற்
றென்பரதவர் போரேறே
145யரியவெல்லா மெளிதினிற்கொண்
டுரிய வெல்லா மோம்பாது வீசி

135. "முதிர்வா ரிப்பி முத்தம்" (புறநா. 53 :1)

137 - 8. பாக்கமென்பதற்கு அரசனிருப்பென்று பொருள்கூறி இவ்வடிகளை மேற்கோளாகக் காட்டினர் ;பதிற். 13 : 12, உரை.

135 - 8. கொற்கை முத்தம் : "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" (நற். 23 : 6) ; "பொறையன் செழியன் பூந்தார் வளவன், கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை, பாவை முத்த மாயிதழ்க் குவளை" (யா. வி. சூ. 95, மேற்.) ; சிறுபாண். 57 - 62-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

140. (பி-ம்.) ‘அஞ்சுவரக்கடக்கும்'

141. "புகழ்படப் புண்ணிய கோழூன் சோறும்" (மதுரைக். 533) ; "ஊன்சோற் றமலை", "பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள்ளமலை" (புறநா. 33 : 14, 177 : 14) ; "ஊன்களோடவைபதஞ் செய்ய" (கந்த. மகேந்திர. நகர்புகு. 29)

143. ஒன்றுமொழி : "ஒன்றுமொழிக் கோசர்" (குறுந். 73 : 4)

146. ஓம்பாதுவீசி : "ஓம்பா வள்ளல்" (மலைபடு. 400) ; "ஓம்பா வீகையின் வண்மகிழ் சிறந்து" (பதிற். 42 : 13) ; "ஓடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக், கடந்தடு தானைச் சேர லாதனை", "ஓம்பா தீயு மாற்ற லெங்கோ" (புறநா. 8 : 4 - 5, 22 : 33); "ஓம்பா வீகையும்" (பு. வெ. 189)

145 - 6. "கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ, மறங்கலங்கத் தலைச்சென்று, வாளுழந்ததன் றாள்வாழ்த்தி, நாளீண்டிய நல்லகவர்க்குத் தேரோடு மாசிதறி" (மதுரைக். 220 - 24) ; "நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து, நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ, யருவிலை