299
யிழிபறியாப் பெருந்தண்பணை
155குரூஉக்கொடிய வெரிமேய
நாடெனும்பேர் காடாக
வாசேந்தவழி மாசேப்ப
வூரிருந்தவழி பாழாக
விலங்குவளை மடமங்கையர்
160துணங்கையஞ்சீர்த் தழூஉமறப்ப
வவையிருந்த பெரும்பொதியிற்
கவையடிக் கடுநோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்பாட
வணங்குவழங்கு மகலாங்க
165ணிலத்தாற்றுங் குழூஉப்புதவி
னரந்தைப் பெண்டி ரினைந்தன ரகவக்
கொழும்பதிய குடிதேம்பிச்
செழுங்கேளிர் நிழல்சேர
நெடுநகர் வீழ்ந்த கரிகுதிர்ப் பள்ளிக்
170குடுமிக் கூகை குராலொடு முரலக்
கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கைக்

154 - 5. மதுரைக் 126-ஆம் அடியின் குறிப்புரையைப்பார்க்க.

159 - 60. மகளிர் துணங்கையாடல் : "துணங்கையந் தழூஉவின் மணங்கமழ் சேரி " (மதுரைக். 329) ; "விழவயர் துணங்கை தழூஉகஞ் செல்ல" (நற். 50 : 3) ; "மகளிர் தழீஇய துணங்கை யானும்", "வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர், துணங்கை நாளும் வந்தன" (குறுந். 31 : 2, 364 : 6) ; கலிகெழு துணங்கை யாடிய மருங்கின்" "முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை யாக" (பதிற். 13 : 5, 52 : 14) ; "தளரிய லவரொடு, துணங்கையாய்", "தமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே ", " நிரைதொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ள " (கலித். 66 : 17 -8, 70 : 14, 73 : 16) ; " முழுவிமிழ் துணங்கை தூங்கிய விழவின் " (அகநா. 336 : 16) துணங்கைக் குரவையும், "துணங்கையர் குரவையர்" (சிலப். 5 : 70)

162 - 3. கவையடிப்பேய் : சிறுபாண். 197-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

170. " துய்த்தலைக் கூகை, கவலை கவற்றுங் குராலம் பறந்தலை" (பதிற். 44 : 18 - 19)