300
களிறுமாய் செருந்தியொடு கண்பமன் றூர்தர
நல்லேர் நடந்த நசைசால் விளைவயற்
பன்மயிர்ப் பிணவொடு கேழ லுகள
175வாழா மையின் வழிதவக் கெட்டுப்
பாழா யினநின் பகைவர் தேஎ
மெழா அத்தோ ளிமிழ்முழக்கின்
மாஅத்தா ளுயர்மருப்பிற்
கடுஞ்சினத்த களிறுபரப்பி
180விரிகடல் வியன்றானையொடு
முருகுறழப் பகைத்தலைச்சென்
றகல்விசும்பி னார்ப்பிமிழப்
பெயலுறழக் கணைசிதறிப்
பலபுரவி நீறுகைப்ப
185வளைநரல வயிரார்ப்பப்

172. (பி - ம்.) ‘ சண்பமன்று '

" களிறுமாய்க்குங் கதிர்க்கழனி " (மதுரைக். 247)

கண்பு : பெரும்பாண். 220 ; மலைபடு. 454 ; பெருங். 2. 19 : 187.

174. பன்மயிர்ப்பிணவு : " பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது " (பெரும்பாண். 342)

175 - 6. "செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப" (பொருந. 134)

179. கடுஞ்சினத்த களிறு : " கடுஞ்சினத்த கொல்களிறு " (புறநா. 55 : 7) ; மதுரை. 44 - 7-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

170. தானைக்குக்கடல் : முல்லை. 28-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

180 - 81. " செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக், கடற்படை குளிப்ப மண்டி " (புறநா. 6 : 11 - 2)

183. "விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉ" (பரி. 22:5) ; "காலமாரியி னம்புதைப்பினும்" (புறநா. 287:3) ; "பாயமாரிபோற் பகழி சிந்தினார்", மால்வரைத் தொடுத்து வீழ்ந்த மணிநிற மாரி தன்னைக், காலிரைத் தெழுந்து பாறக் கல்லெனப் புடைத்த தேபோல், மேனிரைத் தெழுந்த வேடர் வெந்நுனை யப்பு மாரி, கோனிரைத் துமிழும் வில்லாற் கோமகன் விலக்கினானே" (சீவக. 421, 451) ; "நாற்றிசை மருங்கினுங் கார்த்துளி கடுப்பக், கடுங்கணை சிதறி" (பெருங். 3. 27 : 98 : 9)

185. முருகு. 120-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.