| முயர்நிலை யுலக மமிழ்தொடு பெறினும் பொய்சே ணீங்கிய வாய்நட் பினையே முழங்குகட லேணி மலர்தலை யுலகமொ | 200 | டுயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க் கஞ்சிப் பணிந்தொழு கலையே தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழுக வென்னாய் விழுநிதி | 205 | யீத லுள்ளமொ டிசைவேட் குவையே யன்னாய் நின்னொடு முன்னிலை யெவனோ கொன்னொன்று கிளக்குவ லடுபோ ரண்ணல் கேட்டிசின் வாழி கெடுகநின் னவலங் கெடாது நிலைஇயர்நின் சேண்விளக்கு நல்லிசை |
மதியம்போல் வைகலுந் தேயுமே, தானே சிறியார் தொடர்வு" (நாலடி. 125) ; " நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப், பின்னீர பேதையார் நட்பு " (குறள், 782) 197. "அரும்பெற லமிழ்த மார்பத மாகப், பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை " (குறுந். 83 : 1 - 2) 199. மலர்தலையுலகம் : மதுரைக். 237. கடலேணி யுலகம் : "நளியிரு முந்நீ ரேணி யாக, ............ வானஞ் சூடிய, மண்டிணி கிடக்கை " (புறநா. 35 : 1 - 3) 201. (பி - ம்.) ‘ பகைவரஞ்சி ' " வலியரென வழிமொழியலன் " (புறநா. 239 : 6) ; " உற்ற விடத்திலுயிர்வழங்குந் தன்மையோர், பற்றலரைக் கண்டாற் பணிவரோ (மூதுரை. 6) 202. புலமென்பதற்கு நிலமென்று பொருள்கூறி இவ்வடியை மேற்கோள் காட்டினர் ; சீவக. 28, ந. 204. (பி - ம்.) ‘ பழிநமக்கொழுக ' 203 - 4. " வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ, சங்கம் போல் வான்மையார் சால்பு " (பு. வெ. 185) 205. ஈதலால் இசை உறுதல் : குறள், 231 - 2. 203 - 5. " புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி, னுலகுடன் பெறினுங் கொள்ளலர் " (புறநா. 182 : 5 - 6) 208. ஒ. பெரும்பாண் 38. 209. சேண்விளங்கு நல்லிசை : " சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ " (பதிற். 88 : 36)
|