303
210தவப்பெருக்கத் தறாயாண
ரழித்தானாக் கொழுந்திற்றி
யிழித்தானாப் பலசொன்றி
யுண்டானாக் கூர்நறவிற்
றின்றானா வினவைக
215னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப்
பயனற வறியா வளங்கெழு திருநகர்
நரம்பின் முரலு நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாண ருவப்பக் களிறுபல தரீ இக்
220கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ
மறங்கலங்கத் தலைச்சென்று
வாளுழந்ததன் றாள்வாழ்த்தி
நாளீண்டிய நல்லகவர்க்குத்

210. அறாயாணர் : " அறாஅ யாண ரகன்றலைப் பேரூர் " (பொருந.1)

215. " நிலந்தினக் கிடந்த நிதியம் " (மலைபடு. 575) ; " நிலம் பொறுக்க லாத செம்பொ னீணிதி " (சீவக. 402) ; "நிலம் பொறுக்க லாச் செம்பொனா னிறைகுடி" (பிரமோத். உருத்திரா. 50)

216. " பயனற வறியா யவன ரிருக்கையும் "(சிலப். 5 : 10)

217 - 8. " யாழ் ... ... ... ... இன்குரல் விறலியர்" (மலைபடு. 543 - 6) ; " இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ, நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார் " (சீவக, 658); "அங்கையு மிடறுங் கூட்டி நரம்பளைந் தமுத மூறும், மங்கையர் பாடல்" (கம்ப. வரைக். 39); " யார்க்கும், நசைதரு நரம்பு கண்ட மொற்றுமை நயங்கொண் டார்ப்ப " (திருவிளை. விறகு. 28)

218. விறலியர்பேறு : பொருந.159 - 62-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.

219. பாணருக்கு யானையைத்தருதல் : பொருந. 126 - 7, சிறுபாண். 142 - 3-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

222. " அசைவி னோன்றா ணசைவள னேத்தி " (புறநா. 148 : 2)

224. பரிசிலர்க்குத் தேர்தருதல் : சிறுபாண். 142-3-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க ; "தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை, ஓம்பா வள்ளல்" (மலைபடு. 399 - 400) ; " நயந்தோர்க்குத், தேரீயும் வண்கை யவன்்" (கலித். 42 : 20-21) ; " தேர்வீ சிருக்கை யார நோக்கி ", " தேர்வீ சிருக்கை நெடியோன் " (புறநா. 69 : 18, 114 : 6)