210 | தவப்பெருக்கத் தறாயாண ரழித்தானாக் கொழுந்திற்றி யிழித்தானாப் பலசொன்றி யுண்டானாக் கூர்நறவிற் றின்றானா வினவைக | 215 | னிலனெடுக் கல்லா வொண்பல் வெறுக்கைப் பயனற வறியா வளங்கெழு திருநகர் நரம்பின் முரலு நயம்வரு முரற்சி விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப் பாண ருவப்பக் களிறுபல தரீ இக் | 220 | கலந்தோ ருவப்ப வெயிற்பல கடைஇ மறங்கலங்கத் தலைச்சென்று வாளுழந்ததன் றாள்வாழ்த்தி நாளீண்டிய நல்லகவர்க்குத் |
210. அறாயாணர் : " அறாஅ யாண ரகன்றலைப் பேரூர் " (பொருந.1) 215. " நிலந்தினக் கிடந்த நிதியம் " (மலைபடு. 575) ; " நிலம் பொறுக்க லாத செம்பொ னீணிதி " (சீவக. 402) ; "நிலம் பொறுக்க லாச் செம்பொனா னிறைகுடி" (பிரமோத். உருத்திரா. 50) 216. " பயனற வறியா யவன ரிருக்கையும் "(சிலப். 5 : 10) 217 - 8. " யாழ் ... ... ... ... இன்குரல் விறலியர்" (மலைபடு. 543 - 6) ; " இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ, நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார் " (சீவக, 658); "அங்கையு மிடறுங் கூட்டி நரம்பளைந் தமுத மூறும், மங்கையர் பாடல்" (கம்ப. வரைக். 39); " யார்க்கும், நசைதரு நரம்பு கண்ட மொற்றுமை நயங்கொண் டார்ப்ப " (திருவிளை. விறகு. 28) 218. விறலியர்பேறு : பொருந.159 - 62-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க. 219. பாணருக்கு யானையைத்தருதல் : பொருந. 126 - 7, சிறுபாண். 142 - 3-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 222. " அசைவி னோன்றா ணசைவள னேத்தி " (புறநா. 148 : 2) 224. பரிசிலர்க்குத் தேர்தருதல் : சிறுபாண். 142-3-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க ; "தேம்பாய் கண்ணித் தேர்வீசு கவிகை, ஓம்பா வள்ளல்" (மலைபடு. 399 - 400) ; " நயந்தோர்க்குத், தேரீயும் வண்கை யவன்்" (கலித். 42 : 20-21) ; " தேர்வீ சிருக்கை யார நோக்கி ", " தேர்வீ சிருக்கை நெடியோன் " (புறநா. 69 : 18, 114 : 6)
|