| றளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற் கலிகொள் சும்மை யொலிகொ ளாயந் | 265 | ததைந்த கோதை தாரொடு பொலியப் புணந்துட னாடு மிசையே யனைத்து மகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்பக் குருகுநரல மனைமரத்தான் மீன்சீவும் பாண்சேரியொடு | 270 | மருதஞ் சான்ற தண்பணை சுற்றி யொருசார்ச் சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக் கருங்கால் வரகி னிருங்குரல் புலர வாழ்ந்த குழும்பிற் றிருமணி கிளர வெழுந்த கடற்றி னன்பொன் கொழிப்பப் | 275 | பெருங்கவின் பெற்ற சிறுதலை நௌவி மடக்கட் பிணையொடு மறுகுவன வுகளச் சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழற் பாஅ யன்ன பாறை யணிந்து நீலத் தன்ன பைம்பயிர் மிசைதொறும் | 280 | வெள்ளி யன்ன வொள்வீ யுதிர்ந்து சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் |
263 - 4. கலி, செருக்கினை யுணர்த்துதற்கும் (தொல். உரி. சூ. 51, ந.) ; சும்மை அரவமாகிய இசைப்பொருண்மையை உணர்த்துதற்கும் (தொல். உரி. சூ. 51, ந ; இ - வி. சூ. 285 - 6) இவ்வடிகள் மேற்கோள். 267. அகலிருவானத்து : மணி. 19 : 91. 268. மனைமரம் : "மனைமரத் தெல்லுறு மௌவ னாறும்" (குறுந். 19:3-4); "மனைமர மொசிய" (அகநா. 38:13) 271. " தினைகொய்யக் கவ்வைகறுப்ப" புறநா. 20-10. 275. சிறுதலை நௌவி : புறநா. 2 : 21. 275 - 6. முல்லை. 99-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க. 278. " படுத்துவைத் தன்ன பாறை " (மலைபடு. 15) ; " பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல் " (அகநா. 5 : 13) 279. " நீலத் தன்ன விதைப்புனம் " (மலைபடு. 102) 281. (பி - ம்.) ‘ சுரிமுக ' " சுரிமுகிழ் முசுண்டை " (அகநா. 235 : 9) முசுண்டை : சிறுபாண். 166 ; நெடுநல். 13 ; மலைபடு. 101.
|