| மணிமரு ணெய்த லுறழக் காமர் துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர வல்லோன் றைஇய வெறிக்களங் கடுப்ப | 285 | முல்லை சான்ற புறவணிந் தொருசார் நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை நெடுங்கா லையவி யைவன வெண்ணெலொ டரில்கொள்பு நீடி யிஞ்சி மஞ்சட் பைங்கறி பிறவும் | 290 | பல்வேறு தாரமொடு கல்லகத் தீண்டித் தினைவிளை சாரற் கிளிகடி பூசன் மணிப்பூ வவரைக் குரூஉத்தளிர் மேயு மாமா கடியுங் கானவர் பூசல் சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் | 295 | வீழ்முகக் கேழ லட்ட பூசல் கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர் நறும்பூக் கொய்யும் பூச லிருங்கே |
282. நெய்தற்பூவிற்கு மணி : " மாக்கழி மணிப்பூ " (குறுந். 55 : 1) ; " மணிநிற நெய்தல் " (ஐங். 96 : 2) ; " மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தல்" (பதிற். 30 : 2) 279-84. பலமலர் வீழ்ந்த இடத்திற்கு வெறிக்களம் : " பல்லிதழ் தாஅய், வெறிக்களங் கடுக்கும் வியலறை " (மலைபடு. 149 - 50); " எறிசுறாக் கலித்த விலங்குநீர்ப் பரப்பி, னறுவீ ஞாழலொடு புன்னை தாஅய், வெறியயர் களத்தினிற் றோன்றுத் துறைவன்" (குறுந். 318 : 1 - 3) ; " வெறிக்களங் கடுப்ப வீதியு முற்றமு, நிறைப்போது பரப்பி " (பெருங். 2. 2 : 104 - 5) 285. " முல்லை சான்ற முல்லையம் புறவின்" (சிறுபாண். 169) 288. வெண்ணெல் : மலைபடு. 471 ; நற். 7 : 7, 350 : 1 ; அகநா. 40 : 13, 201 : 13, 204 : 10, 211 : 6, 236 : 4, 340 : 14, புறநா. 348 : 1, 399 : 1. 289. இஞ்சி மஞ்சள் : " மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு கடுகும் " (பெருங். 3. 17 : 142) ; " வளரும் வாழையு மிஞ்சியு மஞ்சளு மிடை விடாது நெருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்திலில் " (திருப்புகழ்) 294 - 5. பெரும்பாண். 108 -10-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க. 296 - 7 வேங்கைப்பூக்கொய்யும் பூசல் : " தலைநாட் பூத்த
|