31

1 - திருமுருகாற்றுப்படை

விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
300 தண்கம ழலரிறால் சிதைய நன்பல
வாசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமல ருதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத 
லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
305 முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணி நிறங் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுத றுமியத் தாழை
யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
310 மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை யிரியக் கேழலொ
டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன
குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
315டாமா நல்லேறு சிலைப்பச் சேணின்
றிழுமென விழிதரு மருவிப்

300. அலர்தல்-பரத்தலென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தஞ்சை. 269, உரை.

289-300. இறாலுக்குப் பருதி: மலைபடு. 238-9.

304-5. "யானை முத்துடை மருப்பின்" (மலைபடு. 517-8)

309. "கறிக்கருந்துணருகுப்ப" (திருவிளை. நாடு. 35)

310. முருகு. 205-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க. 

312-3. "இரும்பனஞ் செறும்பி னன்ன பரூஉமயிர்ச். சிறுகட்பன்றி" (அகநா. 277 : 7-8); பனஞ்செறும் பன்ன பன்மயிர் முன்கை" (பெருங். 2.8 : 107); "பெண்ணைவன் செறும்பிற் பிறங்கிச் செறி, வண்ண வன்மயிர்" (கம்ப.கங்கை. 33); "இரும்பனை வெளிற்றின் புன்சா யெனமலி மயிரி னாக்கைக், கரும்பெருங் கரடி" (விநாயக. நாடு. 26)

315. சிலைத்தல் இசைப்பொருளை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 62, பேர். சே. ந; இ. வி. சூ. 285, உரை.

316. "இழுமென்று வந்தீங் கிழியு மலையருவி" (சிலப். குன்றக்.); "இழுமெ னோதையி னிழிதரு மருவி" (ஆனைக்கா.நாடு. 14); "வெள்ளருவி யிழுமெ னோதையும்" (தணிகை. நாடு. 46)

292-316.தொல்.இடை. சூ. 27, ந. மேற்.