1 - திருமுருகாற்றுப்படை | விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த | 300 | தண்கம ழலரிறால் சிதைய நன்பல வாசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமல ருதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று | 305 | முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று நன்பொன் மணி நிறங் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுத றுமியத் தாழை யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற | 310 | மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை யிரியக் கேழலொ டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட் | 315 | டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் றிழுமென விழிதரு மருவிப் |
300. அலர்தல்-பரத்தலென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தஞ்சை. 269, உரை. 289-300. இறாலுக்குப் பருதி: மலைபடு. 238-9. 304-5. "யானை முத்துடை மருப்பின்" (மலைபடு. 517-8) 309. "கறிக்கருந்துணருகுப்ப" (திருவிளை. நாடு. 35) 310. முருகு. 205-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க. 312-3. "இரும்பனஞ் செறும்பி னன்ன பரூஉமயிர்ச். சிறுகட்பன்றி" (அகநா. 277 : 7-8); பனஞ்செறும் பன்ன பன்மயிர் முன்கை" (பெருங். 2.8 : 107); "பெண்ணைவன் செறும்பிற் பிறங்கிச் செறி, வண்ண வன்மயிர்" (கம்ப.கங்கை. 33); "இரும்பனை வெளிற்றின் புன்சா யெனமலி மயிரி னாக்கைக், கரும்பெருங் கரடி" (விநாயக. நாடு. 26) 315. சிலைத்தல் இசைப்பொருளை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 62, பேர். சே. ந; இ. வி. சூ. 285, உரை. 316. "இழுமென்று வந்தீங் கிழியு மலையருவி" (சிலப். குன்றக்.); "இழுமெ னோதையி னிழிதரு மருவி" (ஆனைக்கா.நாடு. 14); "வெள்ளருவி யிழுமெ னோதையும்" (தணிகை. நாடு. 46) 292-316.தொல்.இடை. சூ. 27, ந. மேற்.
|