| கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக மழைகொளக் குறையாது புனல்புக மிகாது |
425 | கரைபொரு திரங்கு முந்நீர் போலக் கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி யாடுதுவன்று விழவி னாடார்த் தன்றே மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூட |
430 | னாளங் காடி நனந்தலைக் கம்பலை வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்க ரன்ன சிவந்துநுணங் குருவிற் கண்பொரு புகூஉ மொண்பூங் கலிங்கம் பொன்புனை வாளொடு பொலியக் கட்டித் |
435 | திண்டோப் பிரம்பிற் புரளுந் தானைக் கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி |
421 - 3.செப்பிற் பூ :"பாதிரி குறுமயிர் மாமலர், நறுமோ ரோடமொடுடனெறிந் தடைச்சிய, செப்பு" (நற். 337 : 4 - 6) ;"மடைமாண் செப்பிற் றமிய வைகிய, பொய்யாப்பூ" (குறுந். 9 : 2 - 3) ;"வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம் "(கலித். 68 : 5) ;" செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை, நறுமலர் " (சிலப். 22 : 121 - 2) ; வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்" மணி. 4 : 65) ;"பித்திகைக் கோதை செப்புவாய் மலரவும்","பூத்தகைச் செப்பும்" (பெருங். 1. 33 : 76, 3. 5 : 78) ; "வேயாது செப்பினடைத்துத் தமிவைகும் வீயினன்ன" (திருச்சிற், 374)
424 - 5."மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது ................ முழுங்குதிரைப் பனிக்கடல்", "கொளக்குறை படாமையின் முந்நீரனையை" (பதிற். 45:19 - 22, 90 : 16)
426 - 7.கொளக் ........... நீர் : "கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து" (அகநா. 162 : 1)," தைஇத் திங்கட் டண்கயம் போலக், கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்" (புறநா. 70 : 6 - 7)
429." நீண்மாடக் கூடலார்"(கலித். 35 : 17) ;முருகு. 71-ஆம் அடியின் குறிப்பிரையைப் பார்க்க.
430. நனந்தலை : முல்லை. 1.
433.பொருந. 82-3-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க ;"இழையறி வாரா, வொண்பூங் கலிங்கம்" (புறநா. 383 : 10 - 11)