319
மொய்ம்பிறந்து திரிதரு மொருபெருந்தெரியன்
மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை
யணிகிளர் மார்பி னாரமொ டளைஇக்
440காலியக் கன்ன கதழ்பரி கடைஇக்
காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான வண்கை வலங்கெழு செல்வர்
நாண்மகி ழிருக்கை காண்மார் பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழற்
445றாவற விளங்கிய வாய்பொ னவிரிழை
யணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர்
மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ
வொண்குழை திகழு மொளிகெழு திருமுகந்
திண்கா ழேற்ற வியலிரு விலோதந்
450தெண்கடற் றிரையி னசைவளி புடைப்ப
நிரைநிலை மாடத் தரமியந் தோறு
மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய
நீரு நிலனுந் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துட னியற்றிய
455மழுவா ணெடியோன் றலைவ னாக

440 குதிரையின் வேகத்திற்குக் காற்றின் வேகம் : "காற்கடுப் பன்ன கடுஞ்செல லிவுளி", "வளிபூட் டினையோ." (அகநா. 224 : 5, 384 : 9) ;"காலியற் புரவி","வளிநடந் தன்னவாச்செல லிவுளியொடு" "வளிதொழி லொழிக்கும் வண்பரிப் புரவி", "வெவ்விசைப் புரவிவீசுவளியாக" (புறநா. 178 : 2, 197 : 1, 304 : 3, 369 :7);"காலியற் புரவியொடு" , "காலியற் செலவிற், புரவி" (பெருங். 1. 38:349, 2. 18:95-6)

442.வானவண்கை : சிறுபாண். 124-6 ; "மழைசுரந் தன்ன வீகை" (மலைபடு. 580) ; "மழைதழீஇய கையாய்" (சீவக. 2779) ; "வருமால் புயல்வண்கை மான்றேர் வரோதயன்", "மழையும் புரை வண்கைவானவன்" (பாண்டிக்கோவை) ; "புயல்போற் கொடைக்கை" (தண்டி. மேற்.) ; "கார்நிகர் வண்கை" (நன்.சிறப்.)

444. "தெள்ளரிச் சிலம்பார்ப்ப" (கலித். 69:8)

448.(பி-ம்.) ‘குழையிருந்த வொளிகெழு'

450. பெருங். 2. 6:20-23.

454.மாகவிசும்பு : பரி. 1:47 ; அகநா. 141:6,253:24 ; புறநா. 35:18.