320
மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர்
வாடாப் பூவி னிமையா நாட்டத்து
நாற்ற வுணவி னுருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபி னுயர்பலி கொடுமா
460ரந்தி விழவிற் றூரியங் கறங்கத்
திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத் 
தாமு மவரு மோராங்கு விளங்கக்
465காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்துபுறங் காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப்பாடி
விழுச்சீ ரெய்திய வொழுக்கமொடு புணர்ந்து
470நிலமமர் வையத் தொருதா மாகி
யுயர்நிலை யுலக மிவணின் றெய்து
மறநெறி பிழையா வன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங் 
குன்றுகுயின் றன்ன வந்தணர் பள்ளியும்

456. முருகு. 128, 

457-8. "வாடாப் பூவி னிமையா நாட்டத்து, நாற்ற வுணவினோரும்" (புறநா. 62:16-7)

461-3. குழந்தைகளுக்குத் தாமரைப்போது : "போதவிழ் தாமரை யன்னநின், காதலம் புதல்வன்" (ஐங். 424) ; "நீரு, ளடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட, குடைநிழற் றோன்றுநின் செம்மலை" (கலித். 84:10-11) ; "பொய்கையுண் மலரென வளர்ந்து" (சீவக. 2756)

466. "பூவும் புகையும் சாவகர் பழிச்ச" (மதுரைக். 476)

470. (பி-ம்) ‘ஒரு திரமாகி'

474. மதுரைக். 488, 501-2.

455-74. "நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலு, முவணச்சேவ லுயர்த்தோ னியமமு, மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமுங், கோழிச் சேவற் கொடியோன் கோட்டமு, மறத்துறை விளங்கிய வறவோர் பள்ளியும்" (சிலப். 14:7-11) ; "நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப், பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக" (மணி. 1:54-5)