322
சிறந்த கொள்கை யறங்கூ றவையமு
நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்
தாவுதி மண்ணி யவிர் துகின் முடித்து
495 மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி
யன்பு மறனு மொழியாது காத்துப்
பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களு
500மறநெறி பிழையா தாற்றி னொழுகிக்
குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்ன
பருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற்
பல்வேறு பண்டமோ டூண்மலிந்து கவினி
மலையவு நிலத்தவு நீரவும் பிறவும்
505பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு

492. அறங்கூறவையம் : "மறங்கெழு சோழ ருறந்தை யவையத், தறங்கெட வறியா தாங்கு" (நற். 400:7-8) ; "அறங்கெழு நல்லவை", (அகநா. 93:5) ; "உறந்தையாவையத், தறநின்று நிலையிற்று" (புறநா. 39:8-9) ; "அறங்கூறவையம்" (சிலப். 5:135) ; "அறநிலை பெற்ற வருள்கொ ளவையத்து" (பெருங். 1. 34:25)

491-2. "நவைநீங்க நடுவுகூறு, மவைமாந்தர்" (பு.வெ. 173)

489-92. "காய்த லுவத்த லகற்றி யொருபொருட்க, ணாய்தலறிவுடையார் கண்ணதே-காய்வதன்க, ணுற்றகுணந் தோன்றா தாகுமுவப்பதன்கட், குற்றமுந் தோன்றா கெடும்" (அறநெறிச். 22)

493. "நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பில்" (முருகு, 193)

கெழுவென்னும் உரிச்சொல் நிறப்பண்பை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். உரி. சூ. 5, ந ; இ-வி. சூ. 283

494. மண்ணுதலென்பதற்குப் பண்ணுதலெனப் பொருள்கூறி இவ்வடியை;
மேற்கோள் காட்டினர்; சீவக. 202, 735, 1808.

497. "அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை, பண்பும் பயனு மது";
(குறள், 45)

499. காவிதி மாக்கள் : "கடிநாட் செல்வத்துக் காவிதி மாக்கள்", "கணக்கருந் திணைகளுங் காவிதிக் கணமும் (பெருங். 3. 22 : 282, 5, 6 : 90)

500. "ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை" (குறள், 48)

501-2. குன்று கண்டன்ன இல் : மதுரைக். 474, 488