| பவ்வே றுருவிற் காயும் பழனுங் | 530 | கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகு மமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும் புகழ்படப் பண்ணிய பேரூன் சோறுங் கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவு | 535 | மின்சோறு தருநர் பல்வயி னுகர வாலிதை யெடுத்த வளிதரு வங்கம் பல்வேறு பண்ட மிழிதரும் பட்டினத் தொல்லெ னிமிழிசை மானக் கல்லென நனந்தலை வினைஞர் கலங்கொண்டு மறுகப் | b>540 | பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை யோத மிருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந் துருகெழு பானாள் வருவன பெயர்தலிற் பல்வேறு புள்ளி னிசையெழுந் தற்றே யல்லங் காடி யழிதரு கம்பலை | 545 | யொண்சுட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு குடமுதற் குன்றஞ் சேரக் குணமுத |
531. (பி-ம்.) ‘குறிமுறி யடரும்' 533. ஊன்சோறு : மதுரைக் 141, குறிப்புரையைப் பார்க்க.; 534. வீழ்ந்த கிழங்கு : "விழுமிதின் வீழ்ந்தன கொழுங்கொடிக் கவலை" (மலைபடு. 128) ; "கிழங்குகீழ் வீழ்ந்து" (நற். 328:1) ; "வள்ளிகீழ் வீழா" (கலித். 39:12) ; "கொழுங்கடி வள்ளிக் கிழங்கு வீழ்க் கும்மே" (புறநா. 109:6) 540. கடற்குட்டம் ; "கடற்குட்டம் போழ்வர் கலவர்" (நான்மணிக். 16) 543-4. "பழுமரத் தீண்டிய பறவையி னெழூஉ, மிழுமென் சும்மை" (மணி. 14:26-7) ; "முட்டிலா மூவறு பாடை மாக்களாற், புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய, மட்டிலா வளநகர்", "சீர்கெழுவளமனை திளைத்து மாசனம் ...................... பார்கெழு பழுமரப் பறவை யொத்தவே" (சீவக. 93, 828) : "களனவி லன்னமே முதல கண்ணகன், றளமலர்ப் புள்ளொடு தயங்கி யின்னதோர், கிளவியென் றறிவருங் கிளர்ச்சித் தாதலான், வளநகர்க் கூலமே போலு மாண்பது" (கம்ப. பம்பை. 7)
|