325
னாண்முதிர் மதியந் தோன்றி நிலாவிரிபு
பகலுரு வுற்ற விரவுவர நயந்தோர்
550காத லின்றுணை புணர்மா ராயிதழ்த்
தண்ணறுங் கழுநீர் துணைப்ப விழைபுனையூஉ
நன்னெடுங் கூந்த னறுவிரை குடைய
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென்னூற் கலிங்கங் கமழ்புகை மடுப்பக்
555பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர்
நெடுஞ்சுடர் விளக்கங் கொளீஇ நெடுநக
ரெல்லை யல்லா நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணுக்கொள
வேழ்புணர் சிறப்பி னின்றொடைச் சீறியாழ்
560தாழ்பயற் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து
வீழ்துணை தழீஇ வியல்விசும்பு கமழ
நீர்திரண் டன்ன கோதை பிறக்கிட்
டாய்கோ லவிர்தொடி விளங்க வீசிப்
போதவிழ் புதுமலர் தெருவுடன் கமழ
565 மேதகு தகைய மிகுநல மெய்திப்
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்;
திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்துக்
கொண்டன் மலர்ப்புதன் மானப்பூ வேய்ந்து
நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி

548-9. நிலாவிரிபு பகலுருவுற்ற இரவு : "பகலுரு வுறழ்நிலாக் கான்று விசும்பி, னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே" (அகநா. 122:10-11)

551. "யான் போது துணைப்ப" (அகநா. 117:11)

554. "பூந்துகில் கழும வூட்டும் பூம்புகை" (சீவக. 71)

555-6. மகளிர் மாலையில் விளக்கேற்றுதல் : "பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி" (குறிஞ்சிப். 224) ; "பைந்தொடி மகளிர் பலர் விளக் கெடுப்ப" (மணி. 5:134) ; "மாலை மணிவிளக்கங் காட்டி ....................... கொடையிடையார் தாங்கொள்ள" (சிலப். 9:3-4)

558 (பி-ம்.) ‘நாணுக் கொளீஇ'

560. (பி-ம்.) ‘தாழ்பெயல்'

562. "மார்விற்றார் கோலி மழை" (பு . வெ. 204)

563. "செறிதொடி தெளிர்ப்ப வீசி" (நற். 20:5)