327
மணங்கமழ் மனைதொறும் பொய்த லயரக்
590 கணங்கொ ளவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய வோண நன்னாட்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்
595மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுந ரிட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பர லுறுப்பக்
கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதரக்
600கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீ ரயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
605குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி
நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுட
னொண்சுடர் விளக்க முந்துற மடையொடு
நன்மா மயிலின் மென்மெல வியலிக்

591. "ஓணத் தானுல காளுமென் பார்களே", "நீ பிறந்த திருவோணம்" (திவ். பெரியாழ். 1. 1:3, 2. 4:2) ; "ஓணன் பொரக்கருணை யூக்கினார்" (ஆனந்த. வண்டு. 491)

600. நீதிநெறி. 100

602-3. "புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கந், தீர்வினை மகளிர் குளனா டரவமும்" (மணி. 7:75-6) என்பதையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

604. "சேக்கை நல்யாழ் செவ்வழி பண்ணி" (பெருங். 1. 33:89). செவ்வழி மாலைக்குரிய பண் : புறநா. 149.

605-6. "நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி" (புறநா. 64:1 ; குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித், தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப், பின்வழி நின்றது முழவே முழவொடு, கூடிநின்றிசைத்த தாமந் திரிகை" (சிலப். 3:139-42)

608. மயிலின் இயலி : முருகு. 205 ; பெரும்பாண். 330-31-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க. மென்மெலவியலி : "மென்மெ