328
கடுஞ்சூன் மகளிர் பேணிக் கைதொழுது
610 பெருந்தோட் சாலினி மடுப்ப வொருசா
ரருங்கடி வேலன் முருகொடு வளைஇ
யரிக்கூ டின்னியங் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித் தழூஉப்பிணையூஉ
615மன்றுதொறு நின்ற குரவை சேரிதொறு
முரையும் பாட்டு மாட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாட்
சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு
620முந்தை யாமஞ் சென்ற பின்றைப்
பணிலங் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து
நொடைநவி னெடுங்கடை யடைத்து மடமத
ரொள்ளிழை மகளிர் பள்ளி யயர
நல்வரி யிறாஅல் புரையு மெல்லடை
625யயிருருப் புற்ற வாடமை விசயங்
கவவொடு பிடித்த வகையமை மோதகந்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவன ருறங்க 
விழவி னாடும் வயிரியர் மடியப்
பாடான் றவிந்த பனிக்கடல் புரையப்
630பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப்

லம்மலர் மேன்மிதித் தேகினாள்" (சீவக. 1336) ; "சொல்லு மாடுமென்மெல வியலும்" (தொல். களவு. சூ. 10, ந. மேற்.) "மென்மெல வியலி வீதி போந்து" (பெருங்4. 17:99)

612. அரிக்கூடின்னியம் : "அரிக்கூடு மாக்கிணை" (புறநா. 378:8)

614. நெடுவேள் : முருகு. 211, பெரும்பாண். 75-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 

614-5. தழூஉப் பிணையூஉ நின்ற குரவை : மதுரைக். 159-60-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 

618. (பி-ம்.) ‘பெரும்பெயர்'

624. அடைக்கு இறால் : "மெழுகு மெல்லடை" (புறநா. 103:10); "தேனி றாலன தீஞ்சுவை யின்னடை" (சீவக. 2674)

628. புறநா. 29:22-3, 629-30 : நற். 18:6-7.