| வேதா ளிகரொடு நாழிகை யிசைப்ப விமிழ்முர சிரங்க வேறுமாறு சிலைப்பப் பொறிமயிர் வாரணம் வைகறை யியம்ப யானையங் குருகின் சேவலொடு காம | 675 | ரன்னங் கரைய வணிமயி லகவப் பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக் கூட்டுறை வயமாப் புலியொடு குழும வான நீங்கிய நீனிற விசும்பின் மின்னுநிமிர்ந் தனைய ராகி நறவுமகிழ்ந்து | 680 | மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த பரூஉக்கா ழாரஞ் சொரிந்த முத்தமொடு பொன்சுடு நெருப்பி னிலமுக் கென்ன வம்மென் குரும்மைப் காய்படுபு பிறவுந் தருமணன் முற்றத் தரிஞிமி றார்ப்ப | 685 | மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப விரவுத்தலைப் பெயரு மேம வைகறை மைபடு பெருந்தோண் மழவ ரோட்டி |
671. (பி-ம்) ‘வேதாளியர்' நாழிகையிசைத்தல் : முல்லை. 55-8, குறிப்புரையைப் பார்க்க. 670-71. சூதர், மாகதர், வேதாளிகர் : சிலப். 5:48 ; மணி. 28:50. சிலப். 5:49, அடியார். மேற். 673. பொறிமயிர் வாரணம் : மணி. 7:116 673-4. யானையங்குருகு : "யானையங் குருகின் கானலம் பெருந்தோடு" (குறுந். 34:4-5) ; "களிமயில், குஞ்சரக் குரல குருகொ டாலும் (அகநா. 145:14-5) ; "கீசுகீ சென்றெங்கு யானைச் சாத்தன் கலந்து" (திருப்பாவை, 7) 678. நீனிற விசும்பு : முருகு. 116, குறிப்புரையைப் பார்க்க. 682. (பி-ம்) ‘நிலம்படுபுக்க' 680-82. சீவக. 72. 683. (பி-ம்) ‘குருப்பைக்காயும்' 684. தருமணன் முற்றம் : நெடுநல். 90 ; நற். 143:2 ; அகநா. 187:9 ; பெருங். 1. 34:40. 686. ஏமவைகறை : "ஏமவைகல்" குறுந். கடவுள் ; பரி. 17:53. சிலப். 4.:80. 687. மழவரோட்டி : "உருவக் குதிரை மழவ ரோட்டிய" (அகநா. 1:2)
|