| யிடைப்புலத் தொழிந்த வேந்துகோட் டியானை பகைப்புலங் கவர்ந்த பாய்பரிப் புரவி | 690 | வேல்கோ லாக வாள்செல நூறிக் காய்சின முன்பிற் கடுங்கட் கூளிய ரூர்சுடு விளக்கிற் றந்த வாயமு நாடுடை நல்லெயி லணங்குடைத் தோட்டி நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி | 695 | நாடர வந்த விழுக்கல மனைத்துங் கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாஅங் களந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு புத்தே ளுலகங் கவினிக் காண்வர மிக்குப்புக ழெய்திய பெரும்பெயர் மதுரைக் | 700 | சினைதலை மணந்த சுரும்புபடு செந்நீ யொண்பூம் பிண்டி யவிழ்ந்த காவிற் சுடர்பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற் றிலங்குகதி ரிளவெயிற் றோன்றி யன்ன தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை | 705 | நிலம்விளக் குறுப்ப மேதகப் பொலிந்து மயிலோ ரன்ன சாயன் மாவின் |
688. இடைப்புலத்தொழிந்த : மதுரைக். 349 692. ஊர்சுடுவிளக்கு : புறநா. 7:8 691-2. "அரவூர் மதியிற் கரிதூர வீம, இரவூ ரெரிகொளீஇக் கொன்று-நிரைநின்ற, பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர், கொல்வார்ப் பெறாஅர் கொதித்து" (தொல். புறத். சூ. 3, ந. மேற்.) ; மதுரைக். 126-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 694. கைதொழூஉப் பழிச்சி : பெரும்பாண். 463 695-7. மலைபடு. 526-9 693-7. மதுரைக். 149-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 698. "வானத் தன்ன வளநகர்" (மதுரைக். 741) ; "மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே, புத்தே ளுலகத்தற்று" (புறநா. 22:34-5) 699. "மலிபுகழ்க்கூடல்" (மதுரைக். 429) 706. (பி-ம்) ‘மயிலோடன்ன' மயிலோரன்னசாயல் : முருகு. 205-ஆம் அடியின் குறிப்புரையையும், சிறுபாண். 16-ஆம் அடியின் குறிப்புரையையும் பார்க்க.
|