333
தளிரே ரன்ன மேனித் தளிர்ப்புறத்
தீர்க்கி னரும்பிய திதலையர் கூரெயிற்
றொண்குழை புணரிய வண்டாழ் காதிற்
710கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத்
தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்
தாய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையிற் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
திருந்துதுயி லெடுப்ப வினிதி னெழுந்து
715திண்கா ழார நீவிக் கதிர்விடு
மொண்கா ழாரங் கவைஇய மார்பின்
வரிக்கடைப் பிரச மூசுவன மொய்ப்ப
வெருத்தந் தாழ்ந்த விரவுப்பூந் தெரியற்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
720வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச்
சோறமை வுற்ற நீருடைக் கலிங்க
முடையணி பொலியக் குறைவின்று கவைஇ
வல்லோன் றைஇய வரிப்புனை பாவை
முருகியன் றன்ன வுருவினை யாகி
725வருபுணற் கற்சிறை கடுப்ப விடையறுத்
தொன்னா ரோட்டிய செருப்புகன் மறவர்

706-7. மகளிர்மேனிக்கு மாந்தளிர் : முருகு. 143-4-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 

707-9. "ஈன்றவ டிதலையோ லீரீப்பெய்யுந் தளிரோடும்" (கலித். 32-7)

715-6. (பி-ம்) ‘கதிர்விடுபொண்காழ்' "தன்கடற் பிறந்த முத்தி னாரமு, முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலைத், தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தி னாரமு, மிருபே ராரமு மேழில்பெற வணியுந், திருவீழ் மார்பிற் றென்னவன்" (அகநா. 13:1-6); "கோவா மலையாரங் கோத்த கடலாரம் ........................ தென்னர் கோன் மார்பினவே" (சிலப். 17 : உள்வரி. 1)

718. விரவுப்பூந்தெரியல் : மதுரைக். 745.

720-21. (பி-ம்) ‘சுடர, வுறையமைவுற்ற சோறுடைக்கலிங்கம்'

723. "வல்லோன் றைஇய பாவைகொல்" (கலித். 56:7)