| பாணர் வருக பாட்டியர் வருக | 750 | யாணர்ப் புலவரொடு வயிரியர் வருகென விருங்கிளை புரக்கு மிரவலர்க் கெல்லாங் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக் களந்தோறுங் கள்ளரிப்ப மரந்தோறு மைவீழ்ப்ப | 755 | நிணவூன்சுட் டுருக்கமைய நெய்கனிந்து வறையார்ப்பக் குரூஉக்குய்ப்புகை மழைமங்குலிற் பரந்துதோன்றா வியனகராற் பல்சாலை முதுகுடுமியி | 760 | னல்வேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பி னிலந்தரு திருவி னெடியோன் போல வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் | 765 | பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி யரியதந்து குடியகற்றிப் பெரியகற் றிசைவிளக்கி |
752. கொடுஞ்சி நெடுந்தேர் : பெரும்பாண். 416-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. பரிசிலர்க்குத் தேர் கொடுத்தல் : மதுரைக். 223-4-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. தேரோடுகளிறுதருதல் : சிறுபாண். 142-3-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. களிறுதருதல் : பொருந. 125-6-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 755. (பி-ம்) ‘ஊன்சூட்டு' 758. ‘தோன்றிய வியன்சாரல்' 759-60. (பி-ம்) ‘முதுகுடுமிநல்' 760-61. "பல்கேள்வித் துறைபோகிய, தொல்லாணை நல்லாசிரியர்" (பட்டினப். 169-70) 763. மதுரைக். 60-61. "நிலந்தரு திருவி னெடியோய்" (பதிற். 82:16) ; "நிலந்தரு திருவின் ................. கௌரியர்", "நிலந்தரு திருவி னெடியோன் றனாது" (சிலப். 15:1-2, 28:3)
|