| முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன்மீ னடுவட் டிங்கள் போலவும் | 770 | பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப் பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப் பெரும்பெயர் மாறன் றலைவ னாகக் கடந்தடு வாய்வா ளிளம்பல் கோச ரியனெறி மரபினின் வாய்மொழி கேட்பப் | 775 | பொலம்பூ ணைவ ருட்படப் புகழ்ந்த மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன ரவரும் பிறருந் துவன்றிப் பொற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த விலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய | 780 | மணங்கமழ் தேறன் மடுப்ப நாளு மகிழ்ந்தினி துறைமதி பெரும வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே. |
768. பொருந. 135-6 ; பெரும்பாண். 441-2. 769. சிறுபாண். 219-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 769-70. சிறுபாண். 219-20-ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க. 773. கோசர் : புறநா. 169:9-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க. 775. (பி-ம்.) ‘உளப்பட' 779-81. பொருந. 85-8-ஆம் அடிகளின் கீழ்க்குறிப்பைப் பார்க்க ; "ஓண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய, தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந், தாங்கினி தொழுகுமதி பெரும" (புறநா. 24:31-3) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. 782. நல்லூழி : மதுரைக். 21.
|