354

146. உரிய எல்லாம் 1ஓம்பாது வீசி-அப்பொருளையெல்லாம் 2நினக்கென்று பாதுகாவாது ஊரிடத்தேயிருந்து பிறர்க்குக்கொடுத்து,

என்றது, "கொள்ளார் தேஎங் குறித்த கொற்றம்" (தொல். புறத். சூ. 12) கூறிற்று.

147. நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து-மிக விரும்பி ஊரின் கண்ணேயிருந்து உறையக்கடவேமென்றுகருதாதே பகைவர்மேற் செல்லுதலை ஏறட்டுக் கொண்டு போக்கிலே ஒருப்பட்டு,

இது 3வஞ்சிகூறிற்று.

148. பனி வார் சிமையம் கானம் போகி-பனியொழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து,

சிமையம் : ஆகுபெயர்.

149. அகம் நாடு புக்கு-அவர்கள் உள்நாடுகளிலே புகுந்து,

இதனால், "தொல்லெயிற்கிவர்தல்" (தொல். புறத். சூ. 12) கூறினார்.

அவர் அருப்பம் வௌவி-அப்பகைவர் அரண்களைக் கைக்கொண்டு அதனுலுமமையாமல்,

இது 4குடுமிகொண்ட மண்ணுமங்கலங் கூறிற்று. இதனால் அரசர் அரண்களை அழித்தமை கூறினார்.

150. [யாண்டுபல கழிய வேண்டுபுலத் திறுத்து :] வேண்டு புலத்து பல யாண்டு கழிய இறுத்து-நீ அழித்தநாடுகளிற் கொள்ள வேண்டும் நிலங்களிலே பலயாண்டுகளும் போம்படி தங்கி,

151, மேம்பட மரீஇய வெல் போர் 5குருசில்-அந்நிலங்கள் பண்டையின் மேலாதற்கு அடிப்படவிருந்த வெல்லும் பேரினையுடைய தலைவனே,

6இது பகைவர்நாட்டைத் தன்னாடாக்கினமை கூறிற்று.

152. உறு செறுநர் புலம் புக்கு-தொன்றுதொட்டுவந்த பகைவர் நிலத்தே விட்டு,

152-3. அவர் கடி காவின் நிலை தொலைச்சி-அவர் காவலையுடைய பொழில்களின் நிற்கின்ற நிலைகளைக் கெடுத்து,

என்றது வெட்டி யென்றவாறு.


1 "ஓம்பாத வீகை-சீர்தூக்காது கொடுக்கும் கொடை" என்பர் புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியர் ; 164.

2 புறநா. 122-ஆம் செய்யுள் இக்கருத்தை விளக்குதல் காண்க.

3 வஞ்சி-மண்ணசையாற் பகைமேற் சேறல்.

4 பெரும்பாண். 450-52, ந. மதுரைக். 349-50, ந.

5 குருசில்-உபகாரியென்பர், பு. வெ. உரையாசிரியர்.

6 மதுரைக். 60, ந. பார்க்க.