373

மானவை (317) அனைத்தும் (323) வழிவழிச்சிறப்ப (324) வளம்பல பயிலப்பட்டு (325) என்க.

நெய்தல்சான்ற (335) பரந்தோங்குவரைப்பின் கண்ணே (319) வளம் பல பயிலப்பட்டு (325) எனமுடிக்க.

325-6. ஆங்கு 1ஐம்பால் திணையும் கவினி-அம்மண்டலத்தின் கண்ணே ஐந்து கூற்றினையுடைய நிலங்களும் அழகுபெற்று,

அமை வர-பொருந்துதல்தோன்ற,

327-8. [முழுவிமிழு மகலாங்கண், விழவுநின்ற வியன்மறுகின் :]

முழவு இமிழும் விழவு நின்ற வியல் மறுகின்-முழவுமுழங்குந் திருநாள் நிலைபெற்ற அகற்சியையுடைய தெருவினையும்,

329. துணங்கை-துணங்கைக்கூத்தினையும்,

அம் தழூஉவின்-அழகினையுடைய குரவைக்கூத்தினையும்,

மணம் கமழ் சேரி-மணநாறுகின்ற பரத்தையர் சேரியினையும்,

330. 2இன் கலி யாணர்-இனிய செருக்கினையுடைத்தாகிய புது வருவாயினையுமுடைய,

அகல் 3ஆங்கண் (327)-அகன்ற ஊரிடத்தே,

330. [குழூஉப்பல பயின்று:] பல குழூஉ பயின்று-பலகுடித்திரள் நெருங்கி,

ஆங்கு-அந்நாட்டில்,

331. பாடல் சான்ற நல் நாட்டு நடுவண்-புலவராற் பாடுதல் முற்றுப் பெற்ற நல்லநாட்டிற்கு நடுவணதாய்,

ஒருசார் தண்பணை சுற்றப்பட்டு (270) ஒருசார் மலைதழுவப்பட்டு (301) ஒருசார் காடுதழுவப்பட்டு (285) ஒருசார் சுரஞ்சேரப்பட்டு (314) ஒருசார் நெய்தல்சான்ற (325) வரைப்பின்கண்ணே (319) வளம்பல பயிலப்பட்டு ஆங்கு (325) ஐம்பாற்றிணையுங்கவினி (326) அந்நாட்டிடத்து (330) அகலாங்கட் (327) குழூஉப்பலபயின்று (330) அமைவரப் (326) பாடல்சான்ற நன்னாட்டு நடுவணதாய் (331) என்க.

332-7. [கலைதாய வுயர்சிமையத்து, மயிலகவு மலிபொங்கர், மந்தியாட மாவிசும் புகந்து, முழங்குகால் பொருத மரம்பயில் காவி, னியங்கு புனல் கொழித்த வெண்டலைக் குவவுமணற், கான்பொழில் :]


1 பாண்டிநாடு ஐவகை நிலங்களும் அமையப்பெற்றதாதலின் பாண்டியனுக்குப் பஞ்சவனென்னும் பெயர் உண்டாயிற்று என்பர்.

2 (பி-ம்.) ‘இன்கண்'

3 ஆங்கணென்பதற்கு ஊரிடமென்று இங்கு எழுதியவாறே, "அகலாங்க ணளைமாறி" (கலித். 108:5) என்னுமிடத்தும் இவ்வுரையாசிரியர் எழுதுதல் அறியத்தக்கது.