378

அணியாய்நின்ற யானைத்திரளையுங் கெடுத்துத் தமக்குப் புகழையுண்டாக்கி எடுத்த வெற்றியமைந்த நன்றாகிய கொடியும்,

இது தும்பைப்போர் கூறிற்று.

372. கள்ளின் களி 1நவில் கொடியொடு-கள்ளினது களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடியும்,

372-3. நல் பல பல் வேறு குழூஉ கொடி-நன்றாகிய பலவற்றினாலே பலவாய் வேறுபட்ட திரட்சியையுடைய கொடிகளும்,

நன்பலவென்றார், 2கல்வி 3கொடை தவம் முதலியவற்றை.

373-4. பதாகை 4நிலைஇ பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க-பெருங்கொடிகளும் நிலைபெற்றுப் பெரிய மலையிடத்து அருவியசையுமாறு போல அசைய, இக்கொடிகள் அருவியினுடங்கும்படி வகைபெற எழுந்து (357) என முன்னே கூட்டுக.

375. பனை மீன் வழங்கும் வளை மேய் 5பரப்பின்-6பனைமீனென்னுஞ் சாதி உலாவுஞ் சங்கு மேய்கின்ற கடலிடத்தே,

376-7. வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ கூம்பு முதல் முருங்க எற்றி-இறுகும் பிணிப்பினையுடைய வலியினையுடைய பாய் கட்டின கயிற்றையறுத்துப் பாயையும்பீறிப் பாய்மரம் அடியிலே முறியும்படி அடித்து,


1 (பி-ம்.) ‘நுவல்', ‘துவல்'

2 கல்விக்குக்கொடி கட்டல் : பட்டினப். 169-71-ஆம் அடிகளையும் அவற்றின் குறிப்புரைகளையும் பார்க்க.

3 கொடைக்குக் கொடி கட்டல் : இக்கொடி தியாகக்கொடி யெனப்படும் ; "தியாகக் கொடியொடு மேற்பவர், வருகென்று நிற்ப" (வீரராஜேந்திர தேவர் மெய்க்கீர்த்தி) ; "தியாகக் கொடியே தனிவளரச் செய்து" (திருவாரூருலா, 421)

4 (பி-ம்.) ‘நிலைஇய'

5 (பி-ம்.) ‘பரம்பின்'

6 "ஒள்ளிய பனைமீன் றுஞ்சுந் திவலைய" "பனைமீன் றிமிலோடு தொடர்ந்து துள்ள" (கம்ப. கடறாவு. 23, 50) ; யானையை விழுங்கும் மீன்கள் இக்கடலிலுமுள ; அவை பனைமீனென்றும் யானைமீனென்றும் மோங்கிலென்றும் அனுவிஷமென்றும் பெயருடையன" (தக்க. 384, உரை) ; "உள்வளைந் துலாய சின்னை யொண்சுறாப் பனைமீ னூறை, தெள்விளித் திருக்கை தந்தி திமிங்கில மிரிந்து பாய்ந்த" (கந்த. கடல்பாய். 11); இம்மீன், பனையனென்றும் வழங்கும் ; "பனையன்றேளி" அருணைக்கலம்பகம், 45)