379

377-8. [காய்ந்துடன், கடுங்காற் றெடுப்ப :] கடு காற்று உடன் காய்ந்து எடுப்ப-கடியகாற்று நாற்றிசையினும் சேரக்கோபித்தெடுக்கையினாலே,

378. கல் பொறாது உரைஇ-நங்குரக்கல் கயிற்றுடனே நின்று பொருது உலாவி,

379. நெடு சுழி பட்ட நாவாய் போல-நெடியசுழியிம் அகப்பட்டுச் சுழலாநின்ற மரக்கலத்தையொக்க,

380. இருதலை பணிலம் ஆர்ப்ப-முன்னும்பின்னுஞ் சங்கொலிப்ப,

யானைமீண்டாற் பின்னின்றவன் ஊதுதற்குப் பின்னுஞ் சங்கு செல்லும்.

380-81. சினம் சிறந்து 1கோலோர் கொன்று மேலோர் வீசி-சினம்மிக்குப் பரிக்கோற் காரரைக்கொன்று பாகரைவீசிப் போகட்டு,

382. மெல் பிணி வல் தொடர் பேணாது காழ் சாய்த்து-மெல்லிய பிணிப்பினையுடைய வலிய நீர்வாரியென்று காலிற்கட்டுஞ் சங்கிலியை நமக்குக் காவலென்று பேணாதே அதுகட்டின தறியைமுறித்து.

383. கந்து நீத்து உழிதரும் கடாம் யானையும்-கம்பத்தைக் கைவிட்டுச்சுழலும் கடாத்தையுடைய யானையும்,
சிறந்து (380) கொன்று வீசிச் (381) சாய்த்து (382) நீத்து (383) ஆர்ப்ப (380) உழிதருங்கடாமெனக் கடாத்தின்றொழிலாகவுரைக்க.

காற்றிற்குக் கடாம் உவமிக்கப்படும்பொருள்.

384. அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து-அழகிய இடங்களைத் தன்னிடத்தேயுடைய பெரிய ஆகாயம் மறையக் காற்றைப் பிளந்து,

தேவருலகம் முதலியவற்றைத் தன்னிடத்தேயுடைமையின் அங்கண்மால் விசும்பென்றார்.

385-6. ஒள் கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செ கால் அன்னத்து சேவல் அன்ன-ஒள்ளிய கிரணங்களையுடைய ஞாயிற்றைத் தாம் சேர்தலை நெஞ்சாலே கருதிக்கொண்டு பறக்குஞ் சிவந்தகாலையுடைய அன்னத்தினது சேவலையொத்த.

387-8. குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் என கடுக்கும் கவின் பெறு தேரும்-நிறவிய பலமயிர்களையுடைய குதிரைகளோடுதலிற் செலவுமிக்குக் காற்றெனக் கடுக ஒடும் அழகினைப்பெறுகின்ற தேரும்,


1 (பி-ம்.) ‘காலோர்'