382

பூரம் முதலியனவும் புழுகிலும் பனிநீரிலும் நனையவைத்திடித்தலின், இடிக்கவல்லவர் 1பலரும் வேண்டிற்று.

400-401. தகை செய் 2தீ சேறு இன் நீர் பசு காய் நீடு கொடி இலையினர்-உடம்பிற்கு அழகைக்கொடுக்கும் இனிய 3கருங்காலி சீவிக் காய்ச்சின களிக்கலந்த இனிய நீரினையுடைய பசியபாக்குடனே வளர்ந்த கொடியீன்ற வெற்றிலையினையுடையாரும்,

"அங்கருங் காலி சீவி யூறவைத் தமைக்கப் பட்ட, செங்களி விராய காயும்" (சீவக. 2473) என்றார். இளங்களி 4யன்னம் நீராயிருத்தலின் இன்னீரென்றார்.

401. கோடு சுடு நூற்றினர்-சங்கு சுடுதலாலுண்டான சுண்ணாம்பையுடையாரும்,

402-4. [இருதலை 5வந்த பகைமுனை கடுப்ப, வின்னுயி ரஞ்சியின்னா வெய்துயிர்த், தேங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றை :]

இரு தலை வந்த பகை முனை கடுப்ப இன் உயிர் அஞ்சி ஏங்குவனர் இருந்து-இரண்டுபக்கத்தானும் படைவந்த பகைப்புலத்தை யொக்கத்தம்முடைய இனியவுயிருக்கு அஞ்சி ஏங்குவாராயிருந்து,

அவை நீங்கிய பின்றை இன்னா வெய்துஉயிர்த்து-அந்நாற்படையும் போனபின்னர் அவற்றானெய்திய பொல்லாவெப்பத்தைப் போக்கி,

எனவே அச்சத்தால் நெஞ்சிற்பிறந்த வருத்தத்தைப்போக்கி யென்றார்.

405. பல் வேறு பண்ணியம் 6தழீஇ திரி விலைஞர்-பலவாய் வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிகின்ற விற்பாரும்,

கொள்ளக்கொள்ளக் குறையாமல் தரத்தர மிகாமல் (426) அரியவும் பெரியவுமாய்ப் (394) பலவாய் வேறுபட்ட பண்ணியமெனக் கூட்டுக.

406. மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர-மலையையொக்கும் மாடங்களிடத்துக் குளிர்ந்த நிழலிலே இருத்தலைச்செய்ய,


சுண்ணமும்", "பொற்குறு சுண்ணமும் (பெருங். 1. 33:120, 42:71-3, 92) ; "சுந்தரப்பொடி தெளித்த செம்பொற் சுண்ணம் வாணுதற், றந்து சுட்டியிட்ட சாந்தம்" (சீவக. 1956)

1 திருவா. திருப்பொற்சுண்ணமென்னும் பகுதியைப் பார்க்க.

2 (பி-ம்.) ‘தீஞ்சோற்று'

3 "பைங்கருங் காலிச் செங்களி யாளைஇ, நன்பகற் கமைந்த வந்துவர்க் காயும்" (பெருங். 3. 14:81-2)

4 அன்னம்-தேங்காய் முதலியவற்றிலுள்ள வழுக்கை,

5 (பி-ம்.) ‘வேந்தர்'

6 (பி-ம்.) ‘தரீஇயதிரிவினைஞர்'