545-6. [ஒண்சுட ருருப்பொளி மழுங்கச் சினந்தணிந்து சென்ற ஞாயிறு :] ஒள் சுடர் உருப்பு ஒளி சினம் தணிந்து மழுங்க சென்ற ஞாயிறு-ஒள்ளிய கிரணங்களையுடைய வெப்பத்தையுடைய ஒளி சினம் மாறிக் குறையும்படி ஒழுகப்போன ஞாயிறு, 546-7. நல் பகல் கொண்ட குடமுதல் குன்றம் சேர-பின்னர் நன்றாகிய பகற்பொழுதைச் சேரக்கொண்டு மேற்றிசையிடத்து அத்த கிரியைச் சேருகையினாலே, 547-9. குணமுதல் நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர-கீழ்த்திசையிடத்தே பதினாறுநாட்சென்று முதிர்ந்த நிறைமதி எழுந்து நிலாப்பரக்கையினாலே பகலின்வடிவையொத்த இராக்காலம் வரும்படி, 549. நயந்தோர்-கணவர்பிரிதலிற் கூட்டத்தை விரும்பியிருந்தார்க்கு, 550. காதல் இன் துணை புணர்மார்-தம்மேற் காதலையுடைய தமக்கு இனிய கணவரைக்கூடுதற்கு, 550-51. ஆய் இதழ் தண் நறு கழுநீர் துணைப்ப-ஆராய்ந்த இதழ்களையுடைய குளிர்ந்த நறிய செங்கழுநீர்களை மாலைகட்டும்படியாக, 551. இழை புனையூஉ-அணிகளை யணிந்து, 552. நல் நெடு கூந்தல் நறு விரை குடைய-நன்றாகிய நெடிய மயிரிற் பூசின நறிய மயிர்ச்சந்தனத்தை அலைத்து நீக்கும்படியாக, 553. நரந்தம் அரைப்ப-கத்தூரியை அரைக்கும்படியாக, நறு சாந்து 1மறுக-நறிய சந்தனம் அரைக்கும்படியாக, 554. மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப-மெல்லிய நூலாற் செய்த கலிங்கங்களுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்டும்படியாக, 555-6. பெண் மகிழ்வு உற்ற பிணை நோக்கு மகளிர் நெடு சுடர் விளக்கம் கொளீஇ-குணச்சிறப்பால் 2உலகத்துப்பெண்சாதி விருப்பமுற்ற மான்பிணைபோலும் நோக்கினையுடைய மகளிர் நெடிய ஒளியினையுடைய விளக்கினையேற்றி, 556-8. [நெடுநக, ரெல்லை யெல்லா நோயொடு புகுந்து, கல்லென் மாலை நீங்க :] நெடு நகர் எல்லை எல்லாம்-பெரிய ஊரினெல்லையாகிய இடமெல்லாம்,
1 மறுக -அரைக்க ; நெடுநல். 50, ந. 2 "பெண்டிரு மாண்மை வெஃகிப் பேதுறு முலையினாளை", "ஆண் விருப் புற்று நின்றா ரவ்வளைத் தோளி னாரே" (சீவக. 587, 2447) என்பவற்றின் குறிப்புரைகளைப் பார்க்க.
|