| முடலை யாக்கை முழுவலி மாக்கள் வண்டுமூசு தேறன் மாந்தி மகிழ்சிறந்து துவலைத் தண்டுளி பேணார் பகலிறந் | 35 | திருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண் மெத்தென் சாயன் முத்துறழ் முறுவற் பூங்குழைக் கமர்ந்த வேந்தெழின் மழைக்கண் மடவரன் மகளிர் பிடகைப் பெய்த | 40 | செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத் தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந் திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது மல்ல லாவண மாலை யயர | 45 | மனையுறை புறவின் செங்காற் சேவ லின்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணா திரவும் பகலு மயங்கிக் கையற்று மதலைப் பள்ளி மாறுவன விருப்பக் கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர் |
31 - 2. மு. பெரும்பாண் . 60- 61. 36. (பி - ம்.)‘ வள்ளியின் ' " வெள்ளி வள்ளியின் விளங்குதோள்" (சீவக. 420) 36 - 7. வழிமோனைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ .94, பேர். 39. பிடகைப்பெய்த : மதுரைக். 397. 39 - 40. செந்தொடையாவதன்றி மோனைத் தொடைப்பாடு இன்றென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ. 94, பேர். 39 - 41. பெருங். 1. 33 : 74 - 5 43. மலர் தூவுதல் : முல்லை. 8 - 10-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க. 43 - 4. "அகனக ரெல்லா மரும்பவிழ் முல்லை, நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன்மாய்ந்த, மாலை" (சிலப். 9 : 1 -3) சிலப். 9:1 - 4, அடியார். மேற். 45 - 6. மனையுறை புறவு மன்று தேர்ந்துண்ணல் : "மனையுறை குரீஇ, முன்றி லுணங்கன் மாந்தி மன்றத், தெருவினுண் டாது குடைவன வாடி" (குறுந். 46 : 2 - 4) 49. " கடியுடை வியனக ரவ்வே" (புறநா. 95 : 3)
|