436
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறன் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
35திருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண்
மெத்தென் சாயன் முத்துறழ் முறுவற்
பூங்குழைக் கமர்ந்த வேந்தெழின் மழைக்கண்
மடவரன் மகளிர் பிடகைப் பெய்த
40செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்
தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்
திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது
மல்ல லாவண மாலை யயர
45மனையுறை புறவின் செங்காற் சேவ
லின்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணா
திரவும் பகலு மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன விருப்பக்
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்

31 - 2. மு. பெரும்பாண் . 60- 61.

36. (பி - ம்.)‘ வள்ளியின் '

" வெள்ளி வள்ளியின் விளங்குதோள்" (சீவக. 420)

36 - 7. வழிமோனைக்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ .94, பேர்.

39. பிடகைப்பெய்த : மதுரைக். 397.

39 - 40. செந்தொடையாவதன்றி மோனைத் தொடைப்பாடு இன்றென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல். செய். சூ. 94, பேர்.

39 - 41. பெருங். 1. 33 : 74 - 5

43. மலர் தூவுதல் : முல்லை. 8 - 10-ஆம் அடிகளின் குறிப்புரைகளைப் பார்க்க.

43 - 4. "அகனக ரெல்லா மரும்பவிழ் முல்லை, நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன்மாய்ந்த, மாலை" (சிலப். 9 : 1 -3)

சிலப். 9:1 - 4, அடியார். மேற்.

45 - 6. மனையுறை புறவு மன்று தேர்ந்துண்ணல் : "மனையுறை குரீஇ, முன்றி லுணங்கன் மாந்தி மன்றத், தெருவினுண் டாது குடைவன வாடி" (குறுந். 46 : 2 - 4)

49. " கடியுடை வியனக ரவ்வே" (புறநா. 95 : 3)