50 | கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக வடவர் தந்த வான்கேழ் வட்டந் தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக் கூந்தன் மகளிர் கோதை புனையார் பல்லிருங் கூந்தற் சின்மலர் பெய்ம்மார் | 55 | தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத் திருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்பக் கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச் சிலம்பி வானூல் வலந்தன தூங்க | 60 | வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம் நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய் கதவந் தாழொடு துறப்பக் கல்லென் றுவலை தூவலின் யாவருந் | 65 | தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் பகுவாய்த் தடவிற் செந்நெருப் பார வாடன் மகளிர் பாடல்கொளப் புணர்மார் தண்மையிற் றிரிந்த வின்குரற் றீந்தொடை கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக் |
51. மு. அகநா. 340 : 16 சிலப். 4 : 37 -8 , அடியார். மேற். 51 - 2. " வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத், தென்மலைப் பிறந்த சந்தன மறுக " (சிலப். 4 : 37 - 8) 54. பல்லிருங் கூந்தல் : ஐங். 308 : 1, 429 : 1 ; அகநா. 43 : 11. 56. "குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு, குணதிசை மருங்கிற் காரகி றுறந்து " (சிலப். 4 : 35 -6) " அகிலென்றது ஆகுபெயராற் புகையை ; " இருங்............புகைப்ப ' என்றார் நெடுநல்வாடையினும் " ஷ. ஷ. அடியார். 57. கைவல் கம்மியன் : நெடுநல். 85. 66. தடவு : " வடபான் முனிவன் றடவினுட் டோன்றி " (புறநா. 201 : 8) ; "தடவளர் முழங்குஞ் செந்தீ" (சீவக. 2373) 68. (பி - ம்.) ‘'தன்மையிற்றிரிந்த ' 69. "முலைவேதி னொற்றி முயங்கிப் பொதிவெம்" (கலித். 106 : 35) ;
|