439
குன்றுகுயின் றன்ன வோங்குநிலை வாயிற்
றிருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பிற்
90றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து
நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை
குறுங்கா லன்னமோ டுகளு முன்கடைப்
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
95நிலவுப்பயன் கொள்ளு நெடுவெண் முற்றத்துக்
கிம்புரிப் பகுவா யம்பண நிறையக்
கலிழ்ந்துவீ ழருவிப் பாடுவிறந் தயல
வொலிநெடும் பீலி யொல்க மெல்லியற் 
கலிமயி லகவும் வயிற்மரு ளின்னிசை
100நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில்
யவன ரியற்றிய வனைமாண் பாவை
கையேந் தையக னிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி

89. முருகு. 70-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.

90. (பி - ம்.) ‘ ஞெமரிய '

மு. பெருங்.1. 47 : 197.

" தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறை " (மணி. 18 : 44) ஞெமிர்தலென்பதற்குப் பொருள் பரத்தலெனக்கூறி இவ்வடியை மேற்கோளாகக் காட்டினர் ; தொல். உரி. சூ. 65, சே. ந ; இ - வி. சூ. 281, உரை.

91. அகநா. 34 : 12 - 3.

93. " பணைநிலை முனைஇய வினைநவில் புரவி" (அகநா. 254 : 12.)

95. " வெண்ணிலவின் பயன்றுய்த்தும் " (பட்டினப். 114) ; "நிலவுப்பயன் கொள்ளு நெடுநிலா முற்றத்து" (சிலப். 4 : 31) ; " சுடர் வெண் ணிலவின் றொழிற்பயன் கொண்ட, மிசைநீண் முற்றத்து" (பெருங். 1. 33 : 61 -2) ; "பொங்கிணர்க் காவு தோறும் புதுமணற்குன்று தோறும், பங்கயச் செங்க ணெம்மான் பானிலாப் பயன் கொண்டு" (பாகவதம், 10. கோவியரை. 22)

97. " அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல" (பெரும்பாண். 226)

98. "மஞ்ஞை, ஒலிநெடும் பீலி" (புறநா. 50 : 2 -3)

99. (பி - ம்.)‘களிமயில் '. அகநா. 177 : 10 -11.

100. நளிமலைச்சிலம்பு : முருகு. 238.