441
மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
125 முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப்
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொ ளீஇத் துகடீர்ந்
தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
130 முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுண ரன்னத் தூநிறத் தூவி
யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
135 தோடமை தூமடி விரித்த சேக்கை
யாரந் தாங்கிய வலர்முலை யாகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுத லுலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
140 வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற்
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
145 பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்கு
லம்மா சூர்ந்த வவிர்நூற் கலிங்கமொடு

132 - 3. " இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட், டுணைபுணரன்னத்தின் றூவிமெல் லணையசைஇ "(கலித். 72 : 1 - 5) ; " துணை புண ரன்னத் தூவியிற் செறித்த, இணையணை", " இணைபுண ரெகினத்திளமயிர் செறித்த, துணையணைப் பள்ளி" (சிலப். 4 : 66 - 7, 27 : 208 - 9)

134. மதுரைக். 721, குறிப்புரையைப் பார்க்க ; கந்த. நாட்டுப். 50.

140. (பி - ம்.) ‘வாயறை '

141. வார்மயிர்முன்கை : பொருந. 32-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.

142. கடிகைநூல் யாத்து : "கைந்நூல் யாவாம்"(குறுந். 218 : 2) ; " காப்புநூல் யாத்து" (தொல். புறத். சூ. 5, ந. மேற்.)

143 - 4. " வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் " (சிலப். 6 : 95)