| மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு |
125 | முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப் புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத் தகடுகண் புதையக் கொ ளீஇத் துகடீர்ந் தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான் வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து |
130 | முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத் துணைபுண ரன்னத் தூநிறத் தூவி யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக் காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் |
135 | தோடமை தூமடி விரித்த சேக்கை யாரந் தாங்கிய வலர்முலை யாகத்துப் பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து நன்னுத லுலறிய சின்மெல் லோதி நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண் |
140 | வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச் செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப் |
145 | பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்கு லம்மா சூர்ந்த வவிர்நூற் கலிங்கமொடு |
132 - 3. " இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட், டுணைபுணரன்னத்தின் றூவிமெல் லணையசைஇ "(கலித். 72 : 1 - 5) ; " துணை புண ரன்னத் தூவியிற் செறித்த, இணையணை", " இணைபுண ரெகினத்திளமயிர் செறித்த, துணையணைப் பள்ளி" (சிலப். 4 : 66 - 7, 27 : 208 - 9)
134. மதுரைக். 721, குறிப்புரையைப் பார்க்க ; கந்த. நாட்டுப். 50.
140. (பி - ம்.) ‘வாயறை '
141. வார்மயிர்முன்கை : பொருந. 32-ஆம் அடியையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.
142. கடிகைநூல் யாத்து : "கைந்நூல் யாவாம்"(குறுந். 218 : 2) ; " காப்புநூல் யாத்து" (தொல். புறத். சூ. 5, ந. மேற்.)
143 - 4. " வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் " (சிலப். 6 : 95)