442
புனையா வோவியங் கடுப்பப் புனைவி
றளிரேர் மேனித் தாய சுணங்கி
னம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை
150 வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின்
மெல்லியன் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவு முரைபல பயிற்றி
155 யின்னே வருகுவ ரின்றுணை யோரென
வுகத்தவை மொழியவு மொல்லாண் மிகக்கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கா
லூறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
160 திண்ணிலை மருப்பி னாடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய

147. " புனையா வோவியம் போல நிற்றலும்", "புனையா வோவியம் புறம்போந் தென்ன"(மணி. 16 : 131 , 22 : 88)

149. அம்பணைத் தடைஇய மென்றோள் : " வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள்" (பதிற். 54 : 3)

தடைஇய மென்றோள் : கலித். 93 : 5.

152. (பி - ம்.) ' நரைவிரவுற்ற '

" நாறைங் கூந்தலு ' நரைவிரா வுற்றன "(மணி. 22 : 130) ; " நரையிடைப் படர்ந்த நறுமென் கூந்தலர்" (பெருங். 1. 41 : 99) ; கடம்பர் கோவிலுலா, 343. பரி. 10 : விசேடக்.

152 - 3. " நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற், செம்முது செவிலியர் பலபா ராட்ட" (அகநா. 254 : 1 -2)

155, " இன்னே வருகுவர்" (முல்லைப். 16)

156. (பி - ம்.)‘ முகைத்தவை '

155 - 6. முல்லை. 20 - 22.

153 - 6. " தலைவியை வற்புறுக்கும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியர் ; இக்கருத்தானே சான்றோர், ‘ செம்முகச்............ஒல்லாள்' என்றார் பாட்டினுள் " (தொல். செய். சூ. 175, .)

161. வீங்குசெலன் மண்டிலம் : " யாங்கன மொத்தியோ வீங்கு செலன் மண்டிலம்" (புறநா. 8 : 6)