| மின்மயங்கு கருவிய கன்மிசைப் பொழிந்தென வண்ண னெடுங்கோட் டிழிதரு தெண்ணீ | 55 | ரவிர்துகில் புரையு மவ்வெள் ளருவித் தவிர்வில் வேட்கையேந் தண்டா தாடிப் பளிங்குசொரி வன்ன பாய்சுனை குடைவுழி நளிபடு சிலம்பிற் பாயம் பாடிப் பொன்னெறி மணியிற் சிறுபுறந் தாழ்ந்தவெம் | 60 | பின்னிருங் கூந்தல் பிழிவனந் துவரி யுள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளித ழொண்செங் காந்த ளாம்ப லனிச்சந் தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி தேமா மணிச் சிகை | 65 | யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம் வடவனம் வாகை வான்பூங் குடச மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை பயினி வானி பல்லிணர்க் குரவம் | 70 | பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா விரிமல ராவிரை வேரல் சூரல் குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம் |
55. அருவிக்குத்துகில் உவமை : முருகு- 296, குறிப்புரை. 57. சுனைக்குப் பளிங்கு உவமை: "மணிகண் டன்ன துணிகயம்" (அகநா. 56:2) ; "பளிங்குவகுத் தன்ன தீநீர்" (புறநா. 150:27) ; "சூழ்ந்த பேரொளி துளும்பிய நிலனை நீ ரென்னாத், தாழ்ந்த வந்துகி லிடவயிற் றழீஇயினன் பளிங்கு, போழ்ந்தி யற்றிய நிலனெனப் பூம்புன லிடைப்போய், வீழ்ந்த னன்பெரு வேத்தவை முகிழ்நகை விளைப்ப" (பாகவதம், 10 : சிசுபாலனைக்கொன்ற. 118) 58. நளிபடு சிலம்பு : "நளிமலைச் சிலம்பு" (நெடுநல். 100) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. 60. துவரி : நற். 96:6. பரிபாடல் 10:80. 61. "நீர்நீடாடிற் கண்ணுஞ் சிவக்கும்" (குறுந். 354) 64. செங்கொடுவேரி : பெருங். 2. 12:25. 68. இவ்வடி, எருவை, மலர்விசேட மென்பதற்கு மேற்கோள் ; பரி. 19:77, பரிமேல்.
|