471
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
75செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
80றாழை தளவ முட்டாட் டாமரை
ஞாழன் மௌவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி 
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை 
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் 
85பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகஞ் சிந்து வாரந்
90தும்பை துழா அய் சுடர்ப்பூந் தோன்றி
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி 
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
95மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு
மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்

75. பெருந்தண்சண்பகம் : முருகு. 27.

77. கல்லிவர் முல்லை : "முல்லை தாய கல்லதர்ச் சிறுநெறி" (நற். 343:1) ; "முல்லை யூர்ந்த கல்லுயர் பேறி" (குறுந். 275:1) ; "கல்லிவர் முல்லைக் களிவண்டு" (யா-வி. சூ. 43, மேற்.)

80. முட்டாட்டமரை : முருகு. 73 ; சிறுபாண். 183, குறிப்புரை.

82. சிறுசெங்குரலி : பெருங். 2. 12:29. 

84. கட்கமழ் நெய்தல் : "கட்கமழ் நெய்த லூதி" முருகு. 74) ; "கட்கமழு நறுநெய்தல்" (மதுரைக். 250) 

87. (பி-ம்.) ‘அடம்பமர்'

அடும்பு : "அடும்பிவ ரணியெக்க ராடிநீ தணந்தக்காற், கொடுங்குழை" (கலித். 132:16-7) ; "படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம்" (திணைமாலை. 51)
96. (பி-ம்.) ‘பாரம்புழகுடன்'