472
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்
புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்
100வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக்
கிள்ளை யோப்பியுங் கிளையிதழ் பறியாப்
பைவிரி யல்குற் கொய்தழை தைஇப்
பல்வே றுருவின் வனப்பமை கோதையெம்
மெல்லிரு முச்சிக் கவின்பெறக் கட்டி
105யெரியவி ருருவி னங்குழைச் செயலைத் 
தாதுபடு தண்ணிழ லிருந்தன மாக
வெண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரங் கமழ மண்ணி
யீரம் புலர விர லுளர்ப் பவிழாக் 
110காழகி லம்புகை கொளீஇ யாழிசை
யணிமிகு வரிமிஞி றார்ப்பத் தேங்கலந்து 
மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்
மலையவு நிலத்தவுஞ் சினையவுஞ் சுனையவும் 
வண்ண வண்ணத்த மலராய்பு விரைஇய

96. புழகு : "அகன்றலைப் புழகும்" (பெருங். 2. 12:27) ; "அழகா வென்றிப் புழகா" (திருவால. 36:12.)

62-97. இவ்வடிகளிற் குறிஞ்சி நிலத்திற்கும் கூதிர்க்காலத்திற்கும் யாமத்திற்குமுரிய பூக்கள் மயங்கிவந்தமை, "எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்" (தொல். அகத். சூ. 19) என்பதனாலமையும்.

100. வள்ளுயிர்த் தெள்விளி : "வள்ளுயிர்ப் பேர்யாழ்" (மலைபடு. 37) 

101. (பி-ம்.) ‘பரியா'

105-6. குறுந். 214.

109. "முன்கை சூழ்ந்த, துகில்கொடு குஞ்சி யீரம் புலர்த்தி" (பெரிய. தடுத்தாட். 16.)

110-11. வண்டின் ஓசைக்கு யாழோசை : ‘நரம்பி னிம்மென விமிரு மாதர் வண்டு" (குறிஞ்சிப் : 147-8) ; பொருந. 211 குறிப் புரையையும், முல்லைப்பாட்டு, 8-ஆம் அடியின் குறிப்புரையையும் பார்க்க ; "அரவ வண்டின மார்த்துட னியாழ்செயும்", "இனவண்டி யாழ் செய", "பல்வண்டி யாழ்செய" (சிலப். 12 : "நாகநாறு", 26:112, 27:194)

113-4. சினையவுஞ் சுனையவும்...........மலர் : "சினையவுஞ் சுனையவு நாடினர் கொயல்வேண்டா" (கலித். 28:1-2)