474
மெல்லிய வினிய மேவரக் கிளந்தெ 
மைம்பா லாய்கவி னேத்தி யொண்டொடி
140யசைமென் சாய லவ்வாங் குந்தி
மடமதர் மழைக்க ணிளையீ ரிறந்த
கெடுதியு முடையே னென்றன னதனெதிர் 
சொல்லே மாதலி னல்லாந்து கலங்கிக்
கெடுதியும் விடீஇ ராயி னெம்மொடு
145சொல்லலும் பழியோ மெல்லிய லீரென
நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கைகவர் நரம்பி னிம்மென விமிரு
மாதர் வண்டொடு சுரும்புநயந் திறுத்த
தாதவி ழலரித் தாசினை பிளந்து
150தாறடு களிற்றின் வீறுபெற வோச்சிக்
கல்லென் சுற்றக் கடுங்குர லவித்தெஞ்
சொல்லற் பாணி நின்றன னாக
விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப் 
பிணையேர் நோக்கின் மனையோண் மடுப்பத் 
155தேம்பிழி தேறன் மாந்தி மகிழ்சிறந்து
சேம மடிந்த பொழுதின் வாய்மடுத்
திரும்புன நிழத்தலிற் சிறுமை நோனா

138. "மெல்லிய வினிய மேவரு தகுந, விவைமொழி யாமெனச் சொல்லினும்" (குறுந். 306:1-2)

139. "நெய்யிடை நீவி மணியொளி விட்டன்ன, ஐவகை பாராட்டி னாய்மற் றெங்கூந்தல்" (கலித். 22:12-3)

140. அவ்வாங்குந்தி : அகநா. 390:10.

130-42. இவ்வடிகள், தலைவன் நாய்காத்தவாற்றிற்கு மேற்கோள் ; தொல். பொருளியல், சூ. 13, ந.

146. சிறுபாண். 36 ; "நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம், பூத்தன பாணாநின் பாட்டு" (பரி. 18:20-21)

147-8. வண்டி னோசைக்கு யாழ்நரம்பினொலி : குறிஞ்சிப். 110, குறிப்புசை. 

149. (பி-ம்.) ‘ததர்சினை' 148-50. பெருங். 2. 12:141-7.

152. இவ்வடி, ஆகவென்பது பிரிவிலசைநிலையாய் நிற்றற்கு மேற்கோள் ; தொல். இடை. சூ. 32, ந.

155. தேம்பிழி தேறல் : பெருங். 2. 2:177.

154-7. அகநா. 348:7-10.