475
தரவுற ழஞ்சிலை கொளீஇ நோய்மிக் 
குரவுச்சின முன்பா லுடற்சினஞ் செருக்கிக்
160கணைவிடு புடையூக் கானங் கல்லென 
மடிவிடு வீளையர் வெடிபடுத் தெதிரக்
கார்ப்பெய லுருமிற் பிளிறிச் சீர்த்தக
விரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்திச்
சினந்திகழ் கடா அஞ் செருக்கி மரங்கொல்பு
165மையல் வேழ மடங்கலி னெதிர்தர 
வுய்விட மறியே மாகி யொய்யெனத் 
திருந்துகோ லெல்வளை தெழிப்ப நாணுமறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் 
சூருறு மஞ்ஞையி னடுங்க வார்கோ
170லுடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை
யண்ணல் யானை யணிமுகத் தழுத்தலிற்

158. வில்லிற்கு அரவு உவமை, "விடுபொறி யரவென விளங்கு வெஞ்சிலை", "அரவின் றோற்றமே போலுஞ் சிலைகளும்" (சீவக. 1850, 2158)

160. கானங் கல்லென : "கானங், கல்லென் றிரட்ட" (குறிஞ்சிப். 227-8)

161. பெரும்பாண். 166, குறிப்புரை.

165. யானைக்குக் கூற்றுவன் உவமை : "கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பின்................வேழம்" (முருகு. 81-2) என்பதன் குறிப்புரையைப் பார்க்க.

164-5. "நெடுநல் யானை, மையலங் கடாஅஞ் செருக்கி மதஞ் சிறந்து" (அகநா. 307:7-8)

162-5. யானைமுழக்கிற்கு இடி உவமை : பரி. 8:17-8 ; அகநா. 144:12-3 ; புறநா. 81:1-2 ; பு. வெ. 37, 289

167. (பி-ம்.) ‘வளைதெளிர்ப்ப'

169. "சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர், .............. அதிர்வனர் நடுங்கி" (பெருங். 1. 45:22-4) 

170. உடுவுறும் பகழி: "உடுவுறு கணையிற் போகி" (அகநா. 292:12) ; உடு-சிறகு ; சீவக. 2191. .

170-71. "செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து, கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்" (தொல். செய். சூ. 95, பேர். மேற்.)