477
நாணு முட்கு நண்ணுவழி யடைதர
185வொய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ
யாக மடைய முயங்கலி னவ்வழிப்
பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை
முழுமுதற் கொக்கின் றீங்கனி யுதிர்ந்தெனப் 
புள்ளெறி பிரசமொ டீண்டிப் பலவி 
190னெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேற 
னீர்செத் தயின்ற தோகை வியலூர்ச்
சாறுகொ ளாங்கண் விழவுக்கள நந்தி 
யரிக்கூட் டின்னியங் கறங்க வாடுமகள் 
கயிறூர் பாணியிற் றளருஞ் சாரல்
195வரையர மகளிரிற் சாஅய் விழைதக
விண்பொருஞ் சென்னிக் கிளைஇய காந்தட்
டண்கம ழலரி தாஅய் நன்பல
வம்புவிரி களத்திற் கவின்பெறப் பொலிந்த
குன்றுகெழு நாடனெம் விழைதரு பெருவிற
200லுள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு
சாறயர்ந் தன்ன மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலருணப்
பைந்நிண மொழுகிய நெய்ம்மலி யடிசில்
205வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு 
விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை

184. "அச்சமு நாணும்.........நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப" (தொல். களவு. சூ. 8) ; உட்கு நாணு மொருங்குவந் தடைதர", "உட்கு நாணு மொருங்குவந் தடைய" (பெருங். 3. 6:87, 4. 13:100) ; "உட்கும் நாணும் ஒருங்கு வருதலின்" (சீவக. 731, .)

193-4. ஆடுமகள் கயிறூர்தல் : "தனிக்கயிற்றிற் - போநீள், கழைக்கோதையர்" (நள. சுயம். 148) 

201-2. "நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோளறியாச் சொன்றி" (குறுந். 233:5-6) 

202-3. பொருந. 66 ; சிறுபாண். 206, குறிப்புரை. 

205. (பி-ம்.) ‘வான்றுணை'