| நீதுயி லெழினு நிலவுவெளிப் படினும் வேய்புரை மென்றோ ளின்றுயி லென்றும் பெறாஅன் பெயரினு முனிய லுறாஅ னிளமையி னிகந்தன்று மிலனே வளமையிற் | 245 | றன்னிலை தீர்ந்தன்று மிலனே கொன்னூர் மாய வரவி னியல்புநினைஇத் தேற்றி நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா வீரிய கலுழுமிவள் பெருமதர் மழைக்க ணாகத் தரிப்பனி யுறைப்ப நாளும் | 250 | வலைப்படு மஞ்சையி னலஞ்செலச் சாஅய் நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்கு லளைச்செறி யுழுவையு மாளியு முளியமும் புழற்கோட் டாமான் புகல்வியுங் களிறும் வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத் | 255 | துருமுஞ் சூரு மிரைதே ரரவமு மொடுங்கிருங் குட்டத் தருஞ்சுழி வழங்குங் கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமு நூழிலு மிழுக்கு மூழடி முட்டமும் பழுவும் பாந்தளு முளப்படப் பிறவும் |
240-41. நம்பி. சூ. 161. 242. தோளிற்றுயிலல் : " அரிவை தோளிணைத் துஞ்சி" (குறுந். 323:6) ; "வேயுறழ் மென்றோட் டுயில்பெறும்" (கலித். 104:24) ; "முருந்தேர் முறுவ லிளையோள், பெருந்தோ ளின்றுயில் கைவிடுகலனே" (அகநா. 193:13-4) ; "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின்" (குறள், 1103) 245. (பி-ம்.) ‘திரிந்தன்றுமிலன்' 231-45. உண்மை செப்பற்கு இவ்வடிகள்மேற்கோள் ; தொல். பொருளியல், சூ. 13, ந. 247. "வண்டுபடு மலரிற் சாஅய்த், தமியேன் மன்ற வளியேன்யானே" (குறுந்,30:5-6) 250. "ஓரி முருங்கப் பீலி சாய, நன்மயில் வலைப்பட் டாங்கு" (குறுந், 244:5-6) 258. ஊழடி முட்டம் : பெருங். 1. 52:32. 259. பழு : குறுந். 180:1.
|