91. நந்தி - நந்தியாவட்டப்பூ, 1நறவம் -நறைக்கொடி, நறு புன்னாகம் - இது புன்னையின் விசேடம், 92. பாரம் - பருத்திப்பூ, பீரம் - பீர்க்கம்பூ, பைங்குருக்கத்தி - பசிய குருக்கத்திப்பூ, 93. ஆரம் - சந்தனப்பூ, காழ்வை - அகிற்பூ, கடி இரு புன்னை - மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ, 94. நரந்தம் - நாரத்தம்பூ, நாகம் - நாகப்பூ, நள்ளிருணாறி - 2இருவாட்சிப்பூ, 95. மா இரு குருந்தும் - கரிய பெரிய குருந்தம்பூவும், வேங்கையும் - வேங்கைப்பூவும், 95-7. [பிறவு, மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன், மாலங் குடைய :] அங்கு மால் உடைய அரக்கு விரித்தன்ன பிறவும் பரு ஏர் அம் புழகுடன் - அச்சாரலிடத்துத் தம்மில் மயக்கமுடையவாய்ச் சாதி லிங்கத்தைப் பரப்பினாற்போன்ற பிறபூக்களையும் பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடனே, பரேரம்புழகு - 3செம்பூவுமாம் ; புனமுருங்கையுமென்பர். 97. மலிவனம் மறுகி - பூக்களிடத்தே மனவேட்கை மிக்குப் பல காலுந் திரிந்துபறித்து, 98. 4வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ - 5மழை பெய்து தன்னிடத்தைக் கழுவித் தூய்தாக்கின அகன்ற பாறையிலே குவித்து,
440:3) ; "தாய தோன்றி தீயென மலரா" (பரி. 11 : 21) ; "வாடையொடு நிவந்த வாயிதழ்த் தோன்றி, சுடர்கொ ளகலிற் சுருங்கு பிணி யவிழ", "சுடர்புரை தோன்றி" (அகநா. 235:7-8, 364:6) ; "தோன்றி யஞ்சுட ரேந்த" (சீவக. 1563) ; "தீவாய்த் தோன்றியும்" (பெருங். 2. 12:26) 1நறவம் - நறவம்பூவெனக் கொள்ளுதலும் பொருந்தும். 2இருள்வாசியென்பது இருவாட்சி யென்று வழங்குகின்றது. 3 "செறிவினைப் பொலிந்த செம்பூங் கண்ணியர்" (பரி. 22:21) 4 "மாசறக் கழீஇய யானை போலப், பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்" (குறுந். 13:1-2) 5 "புனல் கால் கழீஇய பொழில் - நீர் பெருகிய காலத்தே ஏறிய இடத்தைத் தூய்தாக்கிப் போன பொழில்கள்" (பெரும்பாண். 380, ந.)
|